RECENT NEWS

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

முகப்பு

கருணாஸ் கட்சி பதவிக்கு கொலை வெறி சண்டை.. வழக்கறிஞர் படு கொலை..! மு.பு.படையில் நடப்பது என்ன ?

Apr 01, 2025 01:35 AM

313

கருணாஸ் கட்சி பதவிக்கு கொலை வெறி சண்டை.. வழக்கறிஞர் படு கொலை..! மு.பு.படையில் நடப்பது என்ன ?

கருணாஸ் கட்சி பதவிக்கு கொலை வெறி சண்டை.. வழக்கறிஞர் படு கொலை..!

சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு கிடைத்தது...

தகவலின் பேரில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுகாயங்களோடு, தலையில் வெட்டிய அரிவாளோடு அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடல் போலீசாரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞரன கார்த்திக் வெங்கடேஷ் என்பதும் இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளராக பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேத பரிசோதனைக்காக கே கே நகர் இ எஸ் ஐ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் வெங்கடேசன் உடலை பார்த்த, முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் , அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

வழக்கறிஞர் வெங்கடேசனை எதற்காக கொலை செய்தனர் ? கொலையாளி யார் ? என்ற கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். குறிப்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிப்பதற்கான முயற்சி மேற்கொண்டனர். ஏராளமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கருணாஸிடம் இருந்து சில வருடங்களுக்கு முன்பு வழக்கறிஞர் வெங்கடேஷிடம் கார் ஓட்டுநராக வேலைபார்த்து வந்த கார்த்திக் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரது செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானதால் சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்றது அவர்தான் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து செல்போன் டவர் மூலமாக தனிப்படை போலீசார் நாங்குநேரியில் வைத்து கொலையாளி கார்த்திக் மற்றும் அவரது சித்தப்பா உறவு முறை கொண்ட ரவி ஆகிய இருவரை கைது செய்தனர். கார்த்திக் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கறிஞர் வெங்கடேசன் இறந்து கிடந்த வீட்டை உத்தர குமார் என்பவர், கொளத்தூரை சேர்ந்த நபரிடம் வாடகைக்கு எடுத்த நிலையில், அவருடன் இணைந்து திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் உடன் தங்கி இருந்ததாக கூறப்பட்டுகின்றது. உத்தர குமார் பரமக்குடி நீதிமன்ற வாயலில் வைத்து கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கார்த்திக் மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாசிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் , நாங்குநேரிக்கு சென்று தொடர்ச்சியாக வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார், அப்போது கார்த்திக்கை வழக்கில் இருந்து விடுவித்து வெளியே கொண்டு வரவும், குண்டாஸ் உள்ளிட்ட வழக்குகளை உடைக்கவும் வழக்கறிஞர் வெங்கடேசன் உதவி செய்துள்ளார்.

சொந்த ஊரில் இருந்ததால் தொடர்ச்சியாக வம்பு வழக்கில் சிக்கி வருவாய் இல்லாமல் தவித்த ரவுடி கார்த்திக்கை, வெங்கடேசன் சென்னைக்கு அழைத்து வந்து தனது கார் ஓட்டுனராகவும், இதர வேலைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களுடன் , ஓட்டுனர் கார்த்திக் தங்கியிருக்கும் வீட்டில் மது அருந்துவது உள்ளிட்ட சிலவற்றை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் நண்பர்களுடன் வேறொரு இடத்தில் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த போது, கார்த்திக் வீட்டில் உணவு சமைத்து வைத்து இருப்பதாகவும் வந்து சாப்பிட்டு விட்டு போகுமாறும் கூறி அழைத்துள்ளார்.

அப்போது வெங்கடேஷ் தனது இரண்டு நண்பர்களுடன் கார்த்திக் வீட்டிற்கு சென்ற நிலையில் இரவு 7 மணி வரை மூக்கு முட்ட மது அருந்திவிட்டு, அவரது நண்பர்கள் இருவர் மட்டும் சென்ற நிலையில் வெங்கடேஷ் போதையில் நடக்க முடியாமல் அங்கேயே தங்கியதாக கூறப்படுகின்றது

அப்போது வெங்கடேஷ் , ஓட்டுனர் கார்த்திக்கை இழிவாக பேசியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளத்கு. அப்போது கார்த்திக், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக வெட்டி உள்ளார். தலையில் வெட்டிய கத்தியை உருவி பார்த்தும் வராததால் அதனை அப்படியே தலையில் சொருகிய படியே வைத்து விட்டு உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி சென்று உள்ளார் கார்த்திக்.
தனக்கு அனைத்து விதத்திலும் உதவி புரிந்த நிலையிலும், வழக்கறிஞர் வெங்கடேஷ், தன்னை நடத்திய விதம் சரியில்லை எனவும் தனது ஈகோவை டச் செய்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

உத்தரக்குமார் கொலை செய்யப்பட்ட பின் தங்கியிருந்த வீட்டை அலுவலகமாக மாற்ற வெங்கடேசன் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது. அதற்காக 2 லட்சம் அட்வான்ஸ் தொகை கொடுத்து இருப்பதாகவும், அதில் 45 ஆயிரம் ரூபாயை கொலையாளி கார்த்திக் கொடுத்து இருப்பதும் மீதம் உள்ள தொகையை உயிர் இழந்த வெங்கடேஷ் மற்றும் உத்தரக்குமார் ஆகியோர் கொடுத்ததாகவும், கூறப்படும் நிலையில் கார்த்திக்கை தங்ககூடாது என தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தையின் போது தனக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வீட்டை காழி செய்தால் மரியாதையாக இருக்காது என்று கூறியதாகவும், மித மிஞ்சிய போதையில் இருந்த வெங்கடேஷ், புதியதாக கட்சியில் சேர்ந்த தனக்கு மாவட்ட அளவில் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்தும் கேலி செய்து பேசியதாலும், வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதால், ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கார்த்திக் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

ஏற்கனவே மு.பு.படை போஸ்டர் ஓட்டியதில் வெங்கடேஷ் புகைப்படத்தை பயன்படுத்தாமல் தனக்கு மேல் பொறுப்பில் உள்ளவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தியதால் கட்சியினர் முன்பாக வெங்கடேஷ் தன்னை தாக்கி அசிங்கப்படுத்தியதாகவும், தொடர்ந்து தன்னை இழிவு படுத்தும் நோக்கில் செயல்பட்டதால் வெறியோடு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

தனது சித்தப்பா உறவு முறைக்கொண்ட ரவி உள்ளீட்ட நண்பர்களை வரவழைத்து வெங்கடேஷை நிலம் தொடர்பான பஞ்சாயத்து ஒன்று உள்ளது எனக்கூறியும் உணவு சமைத்து வைத்து இருப்பதாகவும் கூறி வரவழைத்து திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளான்.

நாங்குநேரியில் இருந்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இந்த கொலை பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா ? கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

போதை உடல் நலத்தையும் மன நலனையும் கெடுக்கும்... கூடா நட்பு என்றென்றும் கேட்டாய் முடியும்.. ஆத்திரத்தில் செய்தாலும், அவசரத்தில் செய்தாலும் குற்றம் கேடும் தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies