முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
முகப்பு
காத்துவாக்குல ரெண்டு காதல்... ஃபெயில் ஆன விஜய்சேதுபதி சக்சஸ் செய்த சூர்யா எப்பூட்றா?
Mar 30, 2025 10:21 AM
60
ஒரே மேடையில் இரண்டு பெண்கள் காதலித்து கரம்பிடித்த கில்லாடி காதலன்!
நயன்தாராவும் சமந்தாவும் ஒரேநேரத்தில் விஜய்சேதுபதியை காதலிப்பதுபோல் காண்பிக்கப்பட்ட படம்தான், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குக்குல ஒரு காதல்’...
இருவரையும் ஒரே அளவில் காதலிப்பதாக கூறுவார், விஜய்சேதுபதி. இருவரும் திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால், படத்தின் க்ளைமாக்ஸில் அவர்களை திருமணம் செய்துகொள்வதுபோல் காண்பிக்கப்படவில்லை என்றாலும்கூட, ஒரே நேரத்தில் ஒருவரை இரண்டு பெண்கள், காதலிப்பதையும் திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பதையும் பெரும்பாலான மக்கள், ரசிக்கவில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் இரண்டு பெண்களை காதலித்து கரம்பிடித்துள்ளார், தெலங்கானாவைச் சேர்ந்த சூர்யதேவ் என்கிற இளைஞர்.
ஆசிமாபாத் மாவட்டத்திலுள்ள கொமரம் பீம் என்கிற கிராமத்தில்தான் இப்படியொரு திருமணம் நடந்துள்ளது. அதாவது, சூர்ய தேவ் என்கிற இளைஞர் அதே கிராமத்தைச்சேர்ந்த லால்தேவி மற்றும் ஜல்கர் தேவி என இரண்டு தேவிகளையும் ஒரே நேரத்தில் காதலித்துள்ளார். ஒரே மெசேஜை இருவருக்கும் அனுப்புவது, ஒரே மாதிரியான டயலாக்குகளையே பேசுவது என மெயிண்டெய்ன் செய்துவந்துள்ளார், சூர்யா. லால் தேவியிடம் பேசும்போதும் ஜல்கரி தேவியிடம் பேசும்போதும் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக, இரண்டு பேரையும் தேவி... தேவி என அழைத்துள்ளார்.
திடீரென, ஒருநாள் இரண்டு தேவிகளுக்கும் இந்த விஷயம் தெரியவர, சூர்யாவின் சட்டையை பிடித்து இழுத்து, இருவரும் மிதி மிதி என்று மிதிப்பார்கள் என்றுதான், ஊர்மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. இரண்டு தேவிகளுமே சூர்யாவை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார்கள். இதனால், ஊர் பெரியவர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால், உயிருக்கு உயிரான காதலில் மூவரும் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களின் பெயரையும் போட்டு திருமண அழைப்பிதழ் எல்லாம் அச்சடித்து அனைவருக்கும் கொடுத்து, ஊரையே கூட்டி ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ளார், சூர்ய தேவ். இரண்டு தேவிகளும் திருமண கட் அவுட்டில் சிரித்தபடி சூர்ய தேவுடன் நின்று போஸ் கொடுக்கும் ஃபோட்டோக்களும் வைரலாகிவருகின்றன.
அதேநேரத்தில், இதுபோன்ற திருமணங்களை எப்படி கொண்டாடுகிறீர்கள்? தெலங்கானாவில் மட்டுமல்ல பல இடங்களில் இப்படிப்பட்ட திருமணங்கள் நடந்துவருகிறது. இதேபோல், ஒரு பெண் இரண்டு ஆண்களை ஒரே நேரத்தில் காதலித்தாலோ, திருமண செய்துகொண்டாலோ பெண்களை எப்படியெல்லாம் character assassination செய்கிறீர்கள்? எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறீர்கள்? ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டால் அவன் ‘ஆம்பள சிங்கம்’. பெண்கள் திருமணம் செய்துகொண்டால் ‘அவள் நடத்தை கெட்டவள்’, அது அசிங்கம் எனக் கூறும் இச்சமூகம் மாறவேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu