RECENT NEWS

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

Apr 27, 2025

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

Apr 27, 2025

BIG STORIES

செங்கல் ரத்த சரித்திரம்.. ஒற்றை கண் ரவுடியை சுட்டுத்தூக்கியது ஏன்?.. நிஜ சொர்ணாக்கா ஜெசிகா

Mar 29, 2025 07:18 AM

211

செங்கல் ரத்த சரித்திரம்.. ஒற்றை கண் ரவுடியை சுட்டுத்தூக்கியது ஏன்?.. நிஜ சொர்ணாக்கா ஜெசிகா

செங்கல் ரத்த சரித்திரம்.. ஒற்றை கண் ரவுடியை சுட்டுத்தூக்கியது ஏன்?.. நிஜ சொர்ணாக்கா ஜெசிகா

தமிழகத்தில் ரவுடிகளுக்கு பணம் கொழிக்கும் மாவட்டங்களில் முக்கியமானது செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் இரும்பு கழிவுகள் தொடங்கி பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்தம் எடுப்பது, பிரச்சனைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வது என பணம் மழையாக கொட்டி வருகின்றது. இதனால் அரசியல் பின்புலம் உள்ள ரவுடிகளும், ஆள் பின்புலம் உள்ள ரவுடிகளும் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த கொலை செய்ய தயங்குவது இல்லை.. அந்தவகையில் கொலை திட்டத்துடன் நாட்டு வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் காப்புக் காட்டில் மறைந்திருந்த பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு தூக்கி உள்ளனர்.

ஒற்றை கண்ணுடன் வலம் வந்து ரவுடிகளையே நடுங்க வைத்த ரவுடியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

செங்கல்பட்டு... இந்த ராஜாங்கத்தின் மன்னனாக வலம் வந்த ரவுடிகள் பலர் இன்று உலகில் இல்லை.. ஆரம்பத்தில் அடிதடி... அப்புறம் கொலை.. அதற்கப்புறம் கேங்லீடர்... அடுத்தது பஞ்சாயத்து... அரசியல் .. ஒப்பந்தம்.. பணம் என்று வாழ்ந்தவர்களில் , ரத்த சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய முக்கியமானவர் குரங்கு குமார்.. !

இவர் எதிரணியினரால் முகம் சித்தைத்து கொல்லப்பட, அந்த இடத்திற்கு அசால்ட்டாக வந்து அமர்ந்தார் அவரது கொலை வழக்கில் சிக்கிய ரவி பிரகாஷ்..! பெண் ஆசையால் இவரும் வீழ்ந்துவிட அந்த இடத்தை பட்டரை செல்வமும், களத்தூர் சுரேஷும் அடுத்தடுத்து நிரப்பினர், அதே வேகத்தில் இருவரும் இரு வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து தற்போது எதிரும் புதிருமாய் வலம் வந்து கொண்டிருப்பதாக சுருக்கமாக சொல்கின்றனர் விவரம் அறிந்த காக்கிகள்..!

இதனால் அரசியல் பக்கம் சாயாமல் கஞ்சா விற்பனை , கட்டப்பஞ்சாயத்து, ரவுடி மாமூல் போன்றவற்றின் மூலம் செங்கல் பட்டு ரத்த சரித்திரத்தின் மன்னனாக மூடி சூட்டுவது யார் ? என்று பல்வேறு குழுக்களிடையே கடும் போட்டி நிலவியது. அந்த இடத்தை அப்பு என்கிற கார்த்தி எட்டிப்பிடித்து விட, இதனை சகித்துக் கொள்ள முடியாமல் ஆத்திரம் கொண்டான் ரவுடி அசோக் ஒற்றைக்கண் அசோக்..!

வெடிகுண்டு செய்வதில் கைதேர்ந்தவரான தனது மனைவி ஜெஸிகா மூலம் ஜெயிலில் இருந்த படியே கூலிப்படையை ஏவி அப்புவின் கதைக்கு முடிவுரை எழுதியவன் தான் ரவுடி அசோக் என்கிறனர் காவல்துறையினர்

அந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட அசோக்கின் மனைவி ஜெஸிகா அதன் பின்னர் செங்கல்பட்டில் இருந்து தனது இருப்பிடத்தை கூடுவாஞ்சேரிக்கு மாற்றியதாகவும், எப்போதும் இளம் சிறார்களை கைக்குள் வைத்து கஞ்சா விற்பது, வெடிகுண்டு சப்ளை செய்வது போனற வேலைகளில் ஈடுபட்ட அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகின்றது. அவரை போலவே தலைமறைவாக இருந்த அசோக், தனக்கு இடையூறாக இருப்பதாக கருதி அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளித்ததாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து ஒற்றைக்கண் அசோக்கை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். பல்வேறு ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்தாலும் அசோக் எங்கிருக்கிறான் என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் அசோக் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து போலீசார் அவனை சுற்றி வளைத்துள்ளனர். மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை எடுத்து போலீசார் மீது வீச முயன்றதால் உஷாரான போலீசார் அவனது இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கி தோட்டா பாய்ந்ததால் அசோக் அங்கே சுருண்டு விழுந்ததாகவும், அவனை தூக்கி வந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுடும் அளவுக்கு அசோக் அவ்வளவு பெரிய ரவுடியா ? என்று போலீசாரிடம் கேட்ட போது, எப்போதும் கையில் நாட்டு வெடுகுண்டு வைத்திருக்கும் அவன் யாரை.. எப்போது.. எங்கிருந்து தாக்குவான்.. என்பது தெரியாது அந்த அளவுக்கு துல்லியமாக ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்வதில் கில்லாடி என்றனர். மேலும் அவன் மீது கொலை, கொலை முயற்சி என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த போலீசார், அவனது ஒற்றைக்கண் பார்வை பறிப்போன பிளாஸ்பேக்கையும் விவரித்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு முக்கிய புள்ளி ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் டிபன் பாக்ஸில் தவிட்டிற்குள் நாட்டு வெடிகுண்டை மறைத்து எடுத்துச்சென்ருள்ளான் அசோக் . அப்போது பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் வெடி குண்டு வெடித்ததில் ஒற்றை கண் பார்வை சுத்தமாக பறிபோனதாகவும், தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு உயிரே போக வேண்டும் என்ற கொலை வெறியில் சுற்றியதால் தற்காப்புக்காக சுட்டுப்பிடிக்க வேண்டிய நிலை உருவானதாக போலீசார் தெரிவித்தனர்

மேலும் தலைமறைமாக இருந்து கொண்டே அவனுக்கு வெடிகுண்டு சப்ளை, கூலிப்படை சப்ளை என்று உதவி வரும் ஜூனியர் சொர்ணக்கா ஜெசிகாவையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அதே நேரத்தில் எந்த அரசியல் பிரமுகரை ? என்ன காரணத்துக்காக கொலை செய்யும் திட்டத்துடன் இருந்தான் ? என்பது குறித்து அசோக்கிடம் போலீசார் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

ஒரு காலத்தில் பெருங்களத்தூர் , கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ளோர் அடுத்தடுத்து பழிக்குபழியாக படுகொலைகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கையில் ஆயுதம் எடுக்கும் திட்டத்துடன் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து இரும்புக்கரம் கொண்டு அடக்கி மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது காவல் துறையின் கடமை .

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பார்கள் இங்கே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்வதை வாடிக்கையாக்கிய அசோக் அதே குண்டால் கண்ணை பறிகொடுத்தும் திருந்தாமல் தறிகெட்டு ஓடியதால் காலில் குண்டடி பட்டு படுத்த படுக்கையாகி உள்ளான். சட்டத்திற்குள் அடங்க மறுத்து ஓட்டம் காட்டினாலும் குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies