RECENT NEWS

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகப்பு

நடுங்க வைத்த கொடூர ஈரானிய கொள்ளையர்கள்.! திடுக்கிடும் 'திகில்' பின்னணி... Speed போலீஸ் கொடுத்த ஷாக்

Mar 28, 2025 04:39 PM

212

நடுங்க வைத்த  கொடூர ஈரானிய கொள்ளையர்கள்.! திடுக்கிடும் 'திகில்' பின்னணி... Speed போலீஸ் கொடுத்த ஷாக்

ஈரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர வைக்கும் பின்னணி

கடந்த செவ்வாய்க் கிழமையன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சென்னையில் 7 இடங்களில் மூதாட்டிகளிடம் செயின் பறிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தான் இவை..

அந்த கொடூர கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து களத்தில் இறங்கினர். சிசிடிவி காட்சிகளில் கிடைத்த அடையாளங்களை வைத்து ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த விமானத்தை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே சென்றுள்ளனர். அப்போது விமானத்திற்குள் ஒரு நபர் தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமராமல் ஏமர்ஜென்ஸி பகுதியில் உள்ள இருக்கையில் உட்காந்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

மேலும் சிசிடிவி காட்சியில் கொள்ளையன் வலது கையில் கருப்பு நிற கயிறு அணிந்திருந்தையும், வெள்ளை நிற ஷூ அணிந்திருந்ததையும் வைத்து அந்த நபரை போலீசார் பிடித்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த 19 வயதான மேசாம் என்பதும், அவர் ஹைதராபாத் செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.

கொள்ளையன் கையில் டிபன் பாக்ஸ் வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்த நிலையில், மேசாமிற்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததும் மனைவி ஆசையாய் உணவு சமைத்து கொள்ளையடிக்க சென்ற கணவனுக்கு உணவை டிபன் பாக்ஸில் கொடுத்து விட்டததும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜாபர் என்ற முக்கிய கொள்ளையன் விமானத்தில் மும்பை செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்திலேயே போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் சல்மான் என்ற மற்றொரு திருடன் கொள்ளயடித்த நகைகளை எடுத்துக்கொண்டு மும்பை செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. உடனே சல்மானின் போட்டோவை கைப்பற்றிய போலீசார், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து பச்சை நிற டீசர்ட் அணிந்த சல்மான் ரயிலில் ஏறியதை கண்டறிந்தனர். பின்னர் உடனே அந்த ரயிலிலேயே எண்ணூரில் ஒரு ட்ரெயினிங் முடித்து விட்டு அதே ரயிலில் விஜயவாடா சென்று கொண்டிருந்த 3 போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் ரயில் பெட்டிகளில் தேடுதல் வேட்டையை தொடங்கியபோது சல்மான் கிடைக்கவில்லை. பின்னர் ரயில் நெல்லூர் அருகே சென்றபோது பாத்ரூமிற்கு சென்ற சல்மான் பச்சை நிற டீசர்ட்டை மாற்றிக் கொண்டு,மேரூன் கலர் டீசர்ட் அணிந்திருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. உடனே பையில் கொள்ளையடித்த 25 சவரன் நகைகளுடன் இருந்த சல்மானை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கொள்ளைக் கூட்ட தலைவனாக செயல்பட்ட ஜாபரை போலீசார் விசாரணைக்கு தரமணி ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாகவும், தற்காத்து கொள்ள போலீசார் ஜாபரை என்கவுன்டர் செய்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 150 வழக்குகள் வைத்திருந்த ஜாபரை தமிழக போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் மும்பையில் உள்ள ஈரானிய கொள்ளை கும்பலை நடுங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்களை யாரும் இவ்வளவு வேகத்தில் பிடித்ததில்லை எனவும் தமிழக போலீசாரை speed போலீசார் என்று ஜாபர் இறப்பதற்கு முன்பு கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், காலையில் 5 மணிக்கு சென்னைக்கு வந்து இறங்கிய ஈரானிய கொள்ளையர்கள், 6 மணிக்கே தனியாக செல்லும் மூதாட்டிகளின் நகைகளை பறித்து கொள்ளையில் ஈடுபட்டதும் பின்னர் தாங்கள் பயன்படுத்திய பைக்குகளை விட்டுவிட்டு உடனே விமானம் மூலம் தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.

கொள்ளையடிப்பது, நகைகளை மும்பைக்கு எடுத்து செல்வது, அதனை உருக்கி பணமாக மாற்றுவது. பின்னர் கொள்ளையர்கள் மாட்டிக் கொண்டால் அவர்களை காப்பாற்ற வழக்கறிஞர்கள் என 5 குழுக்களாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

விமான டிக்கெட்டுகள் என 1 லட்சம் ரூபாய்க்கு செலவு செய்தால் குறைந்தது 20 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு கொள்ளையில் ஈடுபட வேண்டும் என்பதில் கொள்ளையர்கள் உறுதியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு இடத்தில் கொள்ளையடித்து விட்டால் ஓராண்டிற்கு பின்பு தான் மீண்டும் அதே இடத்தில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் இந்த கும்பல் தாம்பரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். எந்த தடயமும் சிக்காததால் மீண்டும் சென்னையில் கொள்ளையடிக்கலாம் என நினைத்து சென்னைக்கு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு அம்புவிலி ரயில் நிலையத்தில் ஈரானிய கொள்ளையர்கள் செயின் பறிக்கும் போது ரயில்வே போலீசாரிடம் மாட்டிக் கொண்டபோது அவர்களை காப்பாற்ற , ஈரானிய கொள்ளை கும்பல் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் போலீசார் என பலரும் காயமடைந்த நிலையில், போலீசார் கஸ்டடியில் இருந்த ஈரானிய செயின் பறிப்பு கொள்ளையனை சட்டவிரோதமாக மீட்டு சென்றனர். ஆனால் இம்முறை சென்னைக்கு வந்த கொள்ளையர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர் தமிழக காவல் துறையினரும் ரயில்வே போலீசாரும்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies