RECENT NEWS

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

முகப்பு

பா.ஜ.க , திமுக யார் டாப் ? தேர்தலுக்கு பின் உயர்ந்த.. கட்சிகளின் வங்கி இருப்பு..

Mar 26, 2025 02:19 PM

86

பா.ஜ.க , திமுக யார் டாப் ? தேர்தலுக்கு பின் உயர்ந்த.. கட்சிகளின் வங்கி இருப்பு..

தேர்தலுக்கு பின் உயர்ந்த.. கட்சிகளின் வங்கி இருப்பு..

மக்களவை தேர்தலுக்கு பிறகு 6 அரசியல் கட்சிகளின் கையிருப்பு 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் , அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்பு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வது என்பது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது, பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் உட்பட 6 கட்சிகளின் வங்கி இருப்பு தேர்தல் தொடங்கத்தை விட, தேர்தல் முடிந்த பின் அதிகரித்து இருப்பது, காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ், திமுக, பிஆர்எஸ், தெலங்கு தேசம், உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகளின் மொத்த இருப்பு நிதி தேர்தலுக்கு பிறகு 31% அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இக்கட்சிகளிடம் தேர்தலின் தொடக்கத்தில் 11 ஆயிரத்து 326 கோடி இருந்துள்ளது. தேர்தல் செலவுக்காக இக்கட்சிகள் 7 ஆயிரத்து 416 கோடி நிதி திரட்டின. ஆனால் 22 கட்சிகளும் வெறும் 3 ஆயிரத்து 816 கோடி மட்டுமே செலவிட்டுள்ளன. இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இக்கட்சிகளின் கையிருப்பு நிதி 14 ஆயிரத்து 848 கோடி ஆதாவது 31%அதிகரித்துள்ளது.

குறிப்பாக பாஜக, தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லோக் ஜனசக்தி, சிக்கிம் ஜனநாயக கட்சி , அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய 6 கட்சிகளின் இருப்பு நிதி தேர்தலின் தொடக்கத்தில் இருந்தை விட, தேர்தலுக்குப் பிறகு 4 ஆயிரத்து 300 கோடி அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கையிருப்பு நிதி உயர்வில், பாஜக முதலிடத்தில் உள்ளது. இக்கட்சியின் தொடக்க நிதி 5 ஆயிரத்து 921 கோடியாக இருந்தது. தேர்தலுக்கு பிறகு இக்கட்சியின் இருப்பு நிதி 10 ஆயிரத்து 107.2 கோடியாக அதாவது 4ஆயிரத்து185 கோடி அதிகரித்துள்ளது.

இதுபோல் தெலுங்கு தேசம் 65.4 கோடியும், மார்க்சிஸ்ட் 8 கோடியும், லோக் ஜனசக்தி 9.9 கோடியும், எஸ்டிஎப் 76 லட்சமும், ஏஐயுடிஎப்-3.6 லட்சம் என பிற கட்சிகளின் இருப்பு நிதியும் அதிகரித்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 9-வது இடத்தில் இருந்தாலும் அதன் நிதி கையிருப்பு குறைந்துள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக தேர்தலுக்கு முன்பாக 458 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி கையிருப்பு இருந்ததாகவும், தேர்தலுக்கு பின்னர் அது 339 கோடி ரூபாயாக குறைந்து விட்டதாகவும் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies