முகப்பு
துபாயில் கணவர்.. மாறி மாறி பெண்ணை சீரழித்த காமுக மிருகங்கள்... கடலூரில் நேர்ந்த சோகம்
Mar 26, 2025 01:41 PM
1883
தனியாக இருந்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்.. காமுகர்களை தட்டித் தூக்கிய போலீசார்..!
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் துபாயில் வேலை செய்து வருவதால் மனைவி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்கு மதுபோதையில் வந்த அப்பெண்ணின் கொழுந்தனார் சிவக்குமார் என்பவர் பாக்கெட்டில் இருந்த கத்தியை காட்டி அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை சிவக்குமார் தனது மொபைலில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவேன் என அப்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிவக்குமார் தனது நண்பரான வினோத்குமார் என்பவருக்கு வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் வினோத்குமாரும் வீடியோவை காட்டி மிரட்டி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் வினோத்குமாரும் சிவக்குமாரும் சேர்ந்து, அந்த பெண்ணை மிரட்டி, பணம், நகைகளை தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் தன்னிடம் இருந்த பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், 3 பவுன் நகைகளையும் அப்பெண் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் மீண்டும் மீண்டும் இருவரும் பணம் கேட்டு வீடியோவை காண்பித்து மிரட்டிய நிலையில், பணம் இல்லாமல் தவித்த அப்பெண் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சிவக்குமார் , வினோத்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களால் வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரண்டு ராட்சதர்கள் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu