முகப்பு
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி படுகொலை.. முன்விரோதமா..? நகை, பணத்திற்காக கொலையா..? போலீசார் தீவிர விசாரணை
Mar 13, 2025 09:59 AM
65
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி படுகொலை..
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊஞ்சப்பாளையம் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பழனிசாமி, அவரது மனைவி பருவதம் ஆகியோர் இன்று காலை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக கொலையா? அல்லது நகை மற்றும் பணத்திற்காக கொலையா? என கோவை சரக ஐ.ஜி செந்தில்குமார், எஸ்.பி யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் நேரில் சென்று சந்தேகத்தின் பேரில் உறவினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடத்தில் 3 பேர் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டு 100 நாட்கள் கடந்தும் கொலையாளிகள் சிக்காத நிலையில், மீண்டும் அதே பாணியில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu