முகப்பு
டாக்டர், மனைவி, 2 மகன்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
Mar 13, 2025 09:40 AM
582
டாக்டர், மனைவி, 2 மகன்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
சென்னை அண்ணா நகரில், மருத்துவர், அவரது மனைவி, 2 மகன்கள், தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஸ்கேன் மையம் நடத்தி வந்த டாக்டர் தொழில் நஷ்டத்தால் இந்த விபரீத முடிவை மேற்கொண்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவரது மனைவி சுமதி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
இவர்களது மூத்த மகன் +2 தேர்வில் கடந்தாண்டு தேர்ச்சி பெற்று நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். 2ஆவது மகன் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கோல்டன் ஸ்கேன்ஸ் என்ற பெயரில் முதலில் ஒரு ஸ்கேன் சென்டரை தொடங்கிய டாக்டர் பாலமுருகன், பின்னர் வங்கிகளில் 5 கோடி ரூபாய் கடன் வாங்கி, 3 இடங்களில், தனது ஸ்கேன் தொழிலை விரிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த வருமானம் இல்லாமல், ஸ்கேன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், மாதம் 6 லட்ச ரூபாய் EMI கட்ட வேண்டி இருந்ததாலும், டாக்டர் பாலமுருகன் விபரீத முடிவை மேற்கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், மகன்கள் இருவரையும் கொன்று, டாக்டர் பாலமுருகனும், அவரது மனைவியும் விபரீத முடிவை மேற்கொண்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, டாக்டர் குடும்பத்தினரின் 5 செல்போன்களை கைப்பற்றிய போலீசார், சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu