முகப்பு
“சவுந்தர்யா கொலை” ரஜினியின் நண்பர் மீதான புகார் என்ன ? அதிர்ந்து போன கணவர்
Mar 13, 2025 01:54 AM
380
“நடிகை செளந்தர்யா ரூ 100 கோடி சொத்துக்காக கொலை” ரஜினியின் நண்பர் மோகன்பாபு மீது குற்றச்சாட்டு ஏன் ?
90களின் பிற்பகுதியில் வெளியான தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வந்தவர் நடிகை செளந்தர்யா..!
நடிகர் ரஜினி காந்துடன் , அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடனும் நாயகியாக நடித்தவர் செளந்தர்யா
சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே நடிகை செளந்தர்யா, பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, 2004 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
ஏப்ரல் 17 ந்தேதி பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட போது சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த நடிகை செளந்தர்யா , அவரது சகோதரர் உள்ளிட்ட அனைவருமே உடல் கருகி பலியானார்கள்.
இந்த சம்பவம் நடந்து 20 வருடங்கள் கடந்த நிலையில் செளந்தர்யா விபத்தில் சாகவில்லை என்றும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் , ரஜினியின் நண்பரான மோகன்பாபு மீது காவல்துரையினரிடம் புகாராக அளித்திருக்கிறார் எடுரு கட்லா சிட்டிபாபு.
நடிகை செளந்தர்யா திரைப்பட துறையில் உச்சத்தில் இருந்தபோது ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் ஆறு ஏக்கர் நிலத்தில் விருந்தினர் மாளிகை கட்டி இருந்தார், 100 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு உள்ள அந்த விருந்தினர் மாளிகையை தனக்கு விற்க நடிகர் மோகன் பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மோகன் பாபு, நன்கு திட்டமிட்டு சௌந்தர்யாவையும் அவரது சகோதரர் அமர்நாத்தையும் கொலை செய்ததாக சிட்டிபாபு குற்றம் சாட்டி உள்ளார்.
செளந்தர்யா இறந்த பிறகு அந்த விருந்தினர் மாளிகையை மோகன்பாபு குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் அதில் தான் தற்போது மோகன்பாபு இருப்பதாகவும் எனவே தற்போது மஞ்சு டவுனில் உள்ள அந்த விருந்தினர் மாளிகையை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும் என்றும், மோகன் பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜு இந்த சம்பவத்தை அண்மையில் ஒரு மீடியாவிடம் பேசி இருக்கிறார் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் , அந்த பேட்டியின் அடிப்படையில் புகாரில் தெரிவித்து இருப்பதாக கூறி உள்ளார். மோகன் பாபு மீது உரிய நடவடிக்கை எடுத்து விருந்தினர் மாளிகையை பறிமுதல் செய்யுமாறு கடிதம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கும் சிட்டிபாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
பேசு பொருளாகி உள்ள இந்த புகார் குறித்து மோகன்பாபு தரப்பில் கொடுக்கப்படும் விளக்கத்தை பொருத்து இதில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனை அறிந்த சவுந்தர்யாவின் கணவர் ரகு, இந்த புகாரை அடியோடு மறுத்துள்ளார். நடிகர் மோகன்பாபு குடும்பமும் தங்கள் குடும்பமும் 25 ஆண்டுகால நண்பர்கள் என்றும், அவர் எங்கள் சொத்து எதையும் அபகரிக்கவில்லை என்றும் தற்போது பெங்களூரில் வசித்து வரும் செளந்தர்யாவின் கணவர் ரகு தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu