முகப்பு
டாஸ்மாக் உபயத்தால் மனைவிக்கு கொசுத்தொல்லை உயிரோடு தீவைத்த திகில்..! கருகிய மாமனார்.. மனைவி - மருமகளிடம் விசாரணை
Mar 12, 2025 06:43 AM
359
டாஸ்மாக் உபயத்தால் மனைவிக்கு கொசுத்தொல்லை உயிரோடு தீவைத்த திகில்..! கருகிய மாமனார்.. மனைவி - மருமகளிடம் விசாரணை
கொசுத்தொல்லை போல் இரவில் டார்ச்சர் கொடுத்த கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததாக மனைவி மற்றும் மருமகளை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பழைய நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் 55 வயதான மேஸ்திரி சரவணன் .இவரது மகன் ராஜா. இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியும் 3 பெண்குழந்தைகளும் உள்ளனர். ராஜா வெளியூரில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகிறார்.
இதனை தனக்கு சாதகமாக்கிய மாமனார் சரவணன் மது போதையில் வீட்டுக்கு வந்து மருகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக மாமியாரிடம் புகார் தெரிவித்த நிலையில் அவர் தனது கணவரை சத்தம்போட்டுள்ளார். அடங்க மறுத்த சரவணன் அடிக்கடி குடித்து விட்டு வந்து, தினமும் தீராத கொசுத்தொல்லை போல தனது மனைவியை கடுமையாக தாக்குவதும், தனது மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதுமாக வம்பு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த மூன்று பெண் குழந்தைகளிடமும் போதையில் சரவணன் சேட்டையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகின்றது.
இதனால் தனது பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதை கண்டு ஆத்திரமுற்ற மருமகள் , தனது மாமியாருடன் சேர்ந்து மாமனார் சரவணனை எதிர்த்து சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.
சண்டைக்கு பின்னர் சரவணன் மல்லாக்க படுத்து தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகின்றது.
இதனால், சரவணன் உடல் முழுவதும் தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்ட சரவணின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
70% தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார் மருமகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகள் அளித்த புகாரின் பேரில் மாமனார் சரவணன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை உயிரோடு தீவைத்து எரித்த சம்பவம் தொடர்பாக போலீசார் மனைவி மற்றும் மருமகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu