RECENT NEWS

கனடாவிலும் விரட்டப்படும் அபாயம்... நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லையோ?

கனடாவிலும் விரட்டப்படும் அபாயம்... நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லையோ?

Mar 25, 2025

கனடாவிலும் விரட்டப்படும் அபாயம்... நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லையோ?

கனடாவிலும் விரட்டப்படும் அபாயம்... நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லையோ?

Mar 25, 2025

BIG STORIES

கமல் படம் பார்த்து ரவுடியான இளைஞர் குண்டு வீசி கொலை ஏன்..! வசூல் ராஜா கதை முடிந்த பின்னணி

Mar 12, 2025 01:06 AM

487

கமல் படம் பார்த்து ரவுடியான இளைஞர் குண்டு வீசி கொலை ஏன்..!
வசூல் ராஜா கதை முடிந்த பின்னணி

கமல் படம் பார்த்து ரவுடியான இளைஞர் குண்டு வீசி கொலை ஏன்..! வசூல் ராஜா கதை முடிந்த பின்னணி

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில், பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி கொலை, செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சினிமா பார்த்து ரவுடியானவர் சினிமா பாணியில் தீர்த்துக்கட்டப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த ராஜா என்கிற வசூல் ராஜா. ராஜா மீது கொலை கொலை முயற்சி ஆள் கடத்தல் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில், உள்ளது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில், இருந்து வெளியே வந்த வசூல்ராஜா தலைமரைவாக இருந்தார் , சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த வசூல்ராஜாவை அருகில் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது

இந்த சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்த வசூல்ராஜா , கமலின் வசூல்ராஜா திரைப்படம் வெளியானபின்னர், தனது பெயரை வசூல்ராஜா என மாற்றிக் கொண்டார். வசூல்ராஜா என்ற பெயருக்கு ஏற்றார் போல், கடனை வசூல் செய்து கொடுப்பதிலும் சகல கலா கேடியாக வலம் வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் என இருவரை கொலை வழக்கில் சிக்கியதால் சமூகத்தில் பேசப்படும் ரவுடியானார்.

இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியை சேர்ந்த, ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்ததை தொடர்ந்து ரவுடிகள் மத்தியில் வசூல்ராஜாவிற்கு என்று தனி பெயர் உண்டானது
ஒருவரை கொலை செய்ய வேண்டும் என ராஜா முடிவெடுத்து விட்டால், அவரை உறவாடி கெடுப்பாராம். அந்த நபரை நோட்டமி ட்டு, அவருக்கு நெருக்கமானவர்களை விலைக்கு வாங்கி விடுவாராம். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபருடன் மது அருந்தும் அளவுக்கு பழகி அந்த நபரை போதைக்கு அடிமை ஆக்கி விடுவாராம். போதையில் இருக்கும் நபர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு தனது திட்டத்தை எளிதாக முடித்து விடுவார் என்று கூறப்படுகின்றது. இதனால் ரவுடி வசூல் ராஜாவிடம் நெருங்கி பழகவோ, மது அருந்தவோ, ரவுடிகளே அஞ்சுவார்களாம்,

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வசூல்ராஜா திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக கூறி வழக்குகளில் சரண்டர் ஆகி வழக்குகளை முடிப்பதில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டாளிகள், அவரை பழி

வாங்க தேடி வந்த நிலையில் ராஜா வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் காஞ்சிபுரத்துக்கு வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடந்தேறி உள்ளதாக தெரிவித்த போலீசார். பழைய கொலை சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா ? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

எதிரிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்ததாக கொலை வழக்குகளில் சிக்கிய வசூல் ராஜாவின் இறுதி நிமிடங்களும் வெடிகுண்டால் முடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆட ஆட உயிர்போவது ஏன்? நடனமாடும்போது இதயத்தில் என்ன நடக்கும்?
யாரெல்லாம் டான்ஸ் ஆடக்கூடாது?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies