முகப்பு
போலீஸை தெறிக்கவிட்ட குடிமகன்கள்..! அரசே கடை நடத்துமாம்.. அபராதமுமா ? இதற்கு ஒரு எண்டே இல்லையா சார்..? எஸ்.ஐ. முகத்தில் விழுந்த குத்து..
Mar 09, 2025 01:50 AM
243
போலீஸை தெறிக்கவிட்ட குடிமகன்கள்..! அரசே கடை நடத்துமாம்.. அபராதமுமா ? இதற்கு ஒரு எண்டே இல்லையா சார்..?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் பாட்டிலுக்கு 20 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வசூலிப்பதாக கூறி, காவல் நிலையம் முன்பு போதை ஆசாமி வம்பிழுத்த நிலையில், பர்கூரில் போதை ஆசாமி ஒருவர் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
ஜல்லிக்கட்டு காளை போல காவல் நிலைய வாசலில் நின்று கால்களால் தரையை தேய்த்துக்கொண்டு போலீசாருக்கு சவால் விட்டுக் மதுப்பிரியர்களுக்காக காவல் நிலையத்தில் நியாயம் கேட்ட குடிமகன் இவர் தான் ..!
விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் அடைந்து உதவி ஆய்வாளரை தாக்கிய ரோசக்கார குடிமகன் இவர் ..!
இந்த இரு சம்பவங்களும் அரங்கேறியது கிருஷ்ணகிரிமாவட்டம்..!
போச்சம்பள்ளி காவல் நிலைய வாசலில் நின்று போலீசாருக்கு எதிராக சத்தம் போட்டபடியே முறைவாசல் செய்த அந்த குடிமகன், தனது வேட்டியை அவிழ்த்து சாலையில் விரித்ததோடு, செருப்பை தலையில் வைத்து போக்குவரத்துக்கு இடையூறாக படுத்துக் கொண்டார்
சாலையில் கால்மேல் கால்போட்டு படுத்து கொண்டு அட்ராசிட்டி செய்த குடிமகன் மீது சைலன்சரால் வாகன ஓட்டி ஒருவர் உரசி சென்றதால், சூடுதாங்காமல் எழுந்து செருப்பை கையிலெடுத்து வாகன ஓட்டியை அடிக்க ஓடினார் குடிமகன்.
சாலையில் நின்று ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த அந்த அரைடவுசர் குடிகாரரை உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு வந்து சமாதானப்படுத்தி எழுப்பிச்செல்ல, உள்ளிருந்து வந்த போலீஸ்காரர் “குடிகாரன உள்ள கூட்டிவராதேன்னு” வெளியே தள்ளினார்.
நேரம் செல்ல செல்ல உக்கிரமான குடிமகன், தனக்கு சாதி, மதம், கட்சி ஏதும் இல்லையென தான் கட்டியிருந்த பா.ம.க கரை போட்ட வேட்டியை கழட்டி வீசினார்.
குடிச்சி விட்டு வண்டி ஓட்டியதாக தன்னை பிடித்து 15 நாள் ஜெயிலில் போட்டிங்களே மறக்க மாட்டேன், என்னை பாத்ரூமா கழுவ சொல்லுறீங்க.. என்று எமோசனல் ஆனார்
அவரை சமாதானப்படுத்த முனறபோது, இன்ஸ்பெக்டரம்மா தனக்கு 700 ரூபாய் தான் பைன் போட்டாங்க, வண்டிய வெளியில் எடுக்க வக்கீல் செலவு 27 ஆயிரம் ரூபாய் ஆனது, குடித்து விட்டு வண்டி ஓட்டினா புடிக்கிறீங்கல்ல, டாஸ்மாக் கடையில பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகமாக பணம் வாங்குறான் வாங்க அதையும் பிடிங்க என்றார்..
“அது தங்களால் முடியாது” என்று சொன்ன ஏட்டையாவிடம், “ஏன்னா அவன் வாங்குற கூடுதல் பணத்துல உங்களுக்கும் கொடுக்கிறதா, அவன் சொன்னது உண்மைதான் போல” என்று வம்பிழுத்தார்
காவல் நிலைய வாசலில் வைத்தே பாட்டிலில் தண்ணீரை மிக்ஸ் செய்து , மதுவை குடித்து நீண்ட நேரமாக அட்ராசிட்டி செய்த குடிமகனை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைக்கவே முயன்றனர். அவர் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டதும் மாசத்துக்கு ஒரு தடவை அவர் இப்படித்தான் போதையில் வந்து எங்களை மிக கேவலமாக பேசி செல்வார், நாங்களும் அவரை சத்தம் போட்டு அனுப்பி வைபோம் என்று கூலாக கூறிச்சென்றார்.
இரண்டாவது சம்பவம் பர்கூர் பேருந்து நிலையத்தில் இரு சக்கரவாகனத்தில் ஆக்ஸிடேட்டரை முறுக்கி பெண்களுக்கு தொந்தரவு கொடுத்ததாக வல்லரசு என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது உதவி ஆய்வாளர் , தன்னை ஆபாசமாக பேசிவிட்டதாக கூறி அவரது கன்னத்தில் வல்லரசு ஓங்கு குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கட்டுப்படாமல் எட்டிக்குதித்த அந்த குடிகார வெட்டுப்புலியை சமாதனப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார் அங்கு வைத்து சிறப்பாக கவனித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu