RECENT NEWS

ஒட்டன்சத்திரத்தில் கார் சர்வீஸ் சென்டரில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்

ஒட்டன்சத்திரத்தில் கார் சர்வீஸ் சென்டரில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்

Mar 15, 2025

ஒட்டன்சத்திரத்தில் கார் சர்வீஸ் சென்டரில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்

ஒட்டன்சத்திரத்தில் கார் சர்வீஸ் சென்டரில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்

Mar 15, 2025

தமிழ்நாடு

கபடி விளையாட போயி வீடு புகுந்து தாய் மகளை கொன்ற கொள்ளை கும்பல்.. மாவுகட்டும்.. துப்பாக்கி சூடும்.. தீர்வாகுமா?

Mar 06, 2025 03:20 PM

392

கபடி விளையாட போயி வீடு புகுந்து தாய் மகளை கொன்ற கொள்ளை கும்பல்.. மாவுகட்டும்.. துப்பாக்கி சூடும்.. தீர்வாகுமா?

கபடி விளையாட போயி வீடு புகுந்து தாய் மகளை கொன்ற கொள்ளை கும்பல்..

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தில் தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கு மாவுகட்டு போட்ட போலீசார் காட்டுக்குள் பதுங்கி தண்ணிக்காட்டிய ஒருவனை சுட்டுப்பிடித்தனர்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தை சேர்ந்தவர் சீதாலட்சுமி, இவரது மகள் ராம ஜெயந்தி . கடந்த 3 ஆம் தேதி காலையில் சீதா லட்சுமியும் அவரது மகள் ஜெயந்தியும் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். வீட்டில் இருந்த நகைகள் , செல்போன் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை முன்னெடுத்தனர்.

போலீசாரின் விசாரணையில் மேல நம்பிபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் , முகேஷ் கண்ணன் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூர கொலை சம்பவத்தை செய்தது தெரியவந்தது. அவர்கள் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து போலீசார் சுற்றிவளைத்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது வேல்முருகன், முகேஷ் கண்ணன் ஆகிய இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிக்கிய இருவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கு மூல காரணமாக இருந்தது கஞ்சா வியாபாரி முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. கடந்த 2ந்தேதி இரவு மேல நம்பிபுரத்தில் கபடி போட்டி நடந்துள்ளது. அங்கு கபடி விளையாட வந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த கூட்டாளியான வேல்முருகன், கை செலவுக்கு கூட காசு இல்லாத அளவுக்கு டைட்டாக இருப்பதாக முனீஸ்வரனிடம் கூறி உள்ளார்.

இதனை கேட்ட முனீஸ்வரன் தங்கள் ஊரில் ஒரு வீடு இருக்கு... வீட்டில் ஆம்பளை யாரும் கிடையாது... அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு திருமணம் செஞ்சு வைச்சாங்க, இப்ப அந்த பெண் கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கே திரும்ப வந்துருச்சி... தாயும் மகளும் மட்டும் தான் அந்த வீட்டில் உள்ளனர். மொத்த நகையும் வீட்டில் தான் இருக்கும் அங்க போகலாமா ? என்று கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் வகுத்து கொடுத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இரவு கபடி போட்டி முடிந்ததும் மது அருந்திய முனீஸ்வரன் தலைமையிலான கொள்ளைக்கும்பல், சீதாலட்சுமியின் வீட்டின் பக்கவாட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தாய் மகள் இருவரை கழுத்தை நெரித்துள்ளனர். கழுத்தை நெரித்த போது.. இருவரும் ஏசப்பா..,. ஏசப்பா என்று கத்திக் கூச்சலிட்டுள்ளனர், இதையடுத்து இருவரையும் தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகைகளையும், செல்போனையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகின்றது.

தலைமறைவான முனீஸ்வரனை போலீசார் தேடி வந்த நிலையில், கருவேலங்காட்டிற்குள்ளும் வைப்பாறு கரையோரத்திலும் ட்ரோன் காமிரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் முனீஸ்வரன் அவரது சகோதரிக்கு தொடர்பு கொண்டு தனக்கு முன் ஜாமீன் எடுக்கும் படி கூறி இருக்கிறார். மேலும் அவரது வீட்டிற்கு சென்று பதுங்கி இருந்த போது போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட நகையை, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து போலீசார் நகைகளை கைப்பற்றுவதற்காக சென்றபோது அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீசாரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவரிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் நடக்க இயலாமல் தவித்த அவனை தூக்கிச்சென்று போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வேல்முருகன், முகேஷ் கண்ணன்ம் முனீஸ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார். கொலையாளிகளிடம் இருந்து 10 சவரன் நகைகளும், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதாக என விசாரித்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட தாயும், மகளும் சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால் உறவினர்களுடன் நெருங்கிய தொடர்பில்லாமல் இருந்துள்ளனர். அந்த வகையில் தினமும் நள்ளிரவில் கூட ஏசப்பா.. ஏசப்பா என்று உரக்க கத்தி ஜெபம் செய்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. அந்தவகையில் சம்பவத்தன்று கொலையாளிகள் கழுத்தை நெரித்த போதும் ஏசப்பா என்று கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்து வீட்டாரோ, இருவரும் ஜெபம் செய்வதாக நினைத்து அமைதியாக இருந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கனிமவளக் கற்களை கடத்தியதாக திமுக பிரமுகரின் மகன் மீது வழக்கு... இரு டிப்பர் லாரிகள் பறிமுதல்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies