RECENT NEWS

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

Mar 18, 2025

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

Mar 18, 2025

முகப்பு

வீட்டிற்குள் மயங்கி கிடந்த பிரபல பாடகி கல்பனா விபரீதத்திற்கு யார் காரணம்?

Mar 05, 2025 01:03 AM

771

வீட்டிற்குள் மயங்கி கிடந்த பிரபல பாடகி கல்பனா 
விபரீதத்திற்கு யார் காரணம்?

வீட்டிற்குள் மயங்கி கிடந்த பிரபல பாடகி கல்பனா விபரீதத்திற்கு யார் காரணம்?

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல பாடகியாக விளங்கும் கல்பனா ராகவேந்தர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

இசைஞானி இளையராஜாவின் இசையில் “என் ராசாவின் மனசிலே” படத்தில் இடம் பெற்ற இந்த சிறுவர் பாடலின் குரலாக தமிழ் திரையிலகில் அறிமுகமானவர் கல்பனா ராகவேந்தர்..!

கடவுள் தந்த அழகிய வாழ்வை போற்றும் விதமாக இருக்கும் கல்பனாவின் குரல் , கேட்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கும்...

பிரியமான தோழி படத்தில் இடம் பெற்ற பெண்ணே நீயும் பெண்ணா பாடல் மனதை மயக்கும் ரகம்

இத்தகைய ஏராளமான ஹிட் பாடல்களை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பாடியுள்ள பிரபல பாடகி கல்பனா ஐதராபாத்தின் நிஜாம்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுய நினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் அவரது வீட்டு கதவுகள் கடந்த மூன்று தினங்களாக திறக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் அவருடன் பேசுவதற்காக செவ்வாய்கிழமை மாலை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். உள்ளிருந்து யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் கல்பனாவின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்களின் தொலைபேசி மூலம் கல்பனாவை தொடர்பு கொள்ள முயன்றபோதும் பதில் இல்லை..

இது பற்றி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் முன்பக்க கதவை திறக்க முயன்றனர். முடியாததால் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் மயங்கிய நிலையில் கிடந்த கல்பனாவை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அவர் உயிரை மாய்த்துகொள்ள முயன்றதாக கூறப்படும் நிலையில், அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

கல்பனா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்ற அவரது கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மன்மத வக்கீலுக்கு மகத்தான மாவுக்கட்டு
இவரு தான் பூச்சாண்டியாம்..!..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies