BIG STORIES
வீக் எண்ட் பார்ட்டி..மூக்கு முட்ட வோட்கா..மது குடித்த மாணவி பலி..! கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்..
Mar 03, 2025 03:58 PM
382
மூக்கு முட்ட வோட்கா..மது குடித்த மாணவி பலி..!
சென்னை அருகே தோழியின் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் நடந்த வீக் எண்ட் பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக வோட்கா மது குடித்த கல்லூரி மாணவி உயிர் இழந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
தஞ்சாவூரை சேர்ந்த 19 இளம் பெண் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் BCA இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தாய் தந்தையர் தனது மகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என நினைத்து பல லட்சங்களை கட்டணமாக செலுத்தி கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வைத்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாணவி,படூரில் அபார்ட்மெண்ட்டில் தங்கி கல்லூரிக்கு வந்து செல்லும் சக மாணவி ஒருவருடன் நெருங்கி பழகி உள்ளார்.
கடந்த 28 ஆம் தேதியன்று கல்லூரி விடுதியில் இருந்து புறப்பட்ட அந்த மாணவி, தோழியின் அபார்ட்மெண்ட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதியன்று சக தோழிகள் 4 பேர் நண்பர்களுடன் சேர்ந்து வீக் எண்ட் பார்ட்டி வைத்துள்ளனர். இரவு 9 மணி முதல் விடிய விடிய தோழிகள் 'வோட்கா' ரக மதுவை குடித்ததாக கூறப்படுகிறது.
இதில் தஞ்சாவூரை சேர்ந்த மனைவியும் வோட்கா மது அருந்திவிட்டு வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 6 மணிக்கு அப்படியே படுத்து உறங்கியுள்ளார்.
மாலை 4 மணி ஆகியும் அந்த மாணவி எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த சக தோழிகள் மாணவியை எழுப்பியுள்ளனர். அப்போது அவர் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்
இதனால் மயங்கிய மாணவியின் ஆண் நண்பருக்கு போன் செய்து நடந்ததை கூறி அப்பார்ட் மெண்டுக்கு அழைத்துள்ளனர். பதறியடித்து கொண்டு பைக்கில் வந்த ஆண் நண்பர் அப்பெண்ணை தனது இருசக்கர வாகனத்திலே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர், நாடித் துடிப்பு மிகக்குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர் .
கல்லூரி மாணவியின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு ஏற்கனவே வீசிங் பாதிப்பு இருந்து வந்த நிலையில் அளவுக்கதிகமான மது அருந்தி நடனமாடியதால் , அவர் அருந்திய மதுவும், சாப்பிட்ட உணவும் மூச்சுக்குழாயில் சிக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்திருப்பதாக கூறினர்.
பெற்றோர் தங்கள் மகளை படிப்பதற்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த நிலையில், மாணவி உயிரை விட்ட சம்பவம் பெற்றோரை கண்ணீர் விட்டு கதற வைத்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu