RECENT NEWS

கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு..! மேடை அருகே கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நிறுத்தம்

கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு..! மேடை அருகே கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நிறுத்தம்

Mar 24, 2025

கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு..! மேடை அருகே கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நிறுத்தம்

கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு..! மேடை அருகே கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நிறுத்தம்

Mar 24, 2025

BIG STORIES

மொட்டை மாடிக்கு தனியா வா.. காதலியின் டெரரர் ஸ்கெட்ச்..டீயில் கலந்த எலி மருந்து.. முடிஞ்சா உயிரை காப்பாத்திக்கோ...

Mar 03, 2025 09:23 AM

320

மொட்டை மாடிக்கு தனியா வா.. காதலியின் டெரரர் ஸ்கெட்ச்..டீயில் கலந்த எலி மருந்து.. முடிஞ்சா உயிரை காப்பாத்திக்கோ...

காதலியின் டெரரர் ஸ்கெட்ச்..டீயில் கலந்த எலி மருந்து

விழுப்புரம் அருகே தனியாக சந்தித்து காதலி கொடுத்த டீயை ஆசையோடு குடித்த சட்டக் கல்லூரி மாணவன் சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், டீயில் எலி மருந்து கலந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை சினிமாக்களில் எப்படி பார்த்திருப்போமோ அதே நிலையில் சிகிச்சையில் உள்ள இவர் தான் விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவன் ஜெயசூர்யா.

ஜெயசூர்யாவும் அதேப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை கொண்டவர்கள் என்பதால் இருகுடும்பத்தாரும் காதல் என்ற அந்த உறவை கண்டித்தனர்.

இதை புரிந்து கொண்ட ஜெயசூர்யா, காதலியிடம் கூறிய போதும் ஏற்க மறுத்த அவர், நம்மை பிரிப்பதற்காக பெற்றோர் சதி செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும், காதலைத் தொடராத ஜெயசூர்யாவை வழிக்கு கொண்டு வருவதற்காக தன் கையை பிளேடால் கீறிக் கொண்டு ரத்தம் வடியும் புகைப்படத்தை வாட்ஸ்ப்பில் அனுப்பியுள்ளார் அந்த பெண்.

காதலியின் ரத்தத்தை பார்த்ததும் மனம் மாறி மீண்டும் பேசி வந்துள்ளார் ஜெயசூர்யா. அப்போது, காதலுக்கு இடையூறாக இருக்கும் அப்பாவிற்கு எலி மருந்து கொடுத்து கொலை செய்யப் போவதாக ஜெயசூர்யாவுக்கு வாட்ஸ்ப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் காதலி.

காதலியின் அன்பு கொடூரமாக மாறி வருவதை கண்டு அவரது செல்ஃபோன் எண்ணை ப்ளாக் செய்துள்ளார் ஜெயசூர்யா. ஆனாலும், தனது அம்மாவின் செல்ஃபோன் மூலமாக ஜெயசூர்யாவிடம் பேசி மீண்டும் காதலை தொடர்ந்துள்ளார் அந்த பெண்.

அப்போது, வீட்டில் யாரும் இல்லை தனிமையில் சந்திக்கலாம் வா என அழைத்துள்ளார் ஜெயசூர்யா. தான் கையோடு எடுத்து வந்த டீயை காதலனுக்கு கொடுத்து விட்டு மொட்டை மாடியில் நின்று சிறிது நேரம் பேசி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த பெண்.

சிறிது நேரம் கழித்து என்னையே வேணாம் என்று சொன்ன உனக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார் அந்த பெண்.

விளையாட்டிற்காக சொல்கிறார் என ஜெயசூர்யா நினைத்த போது, டீயில் எலி மருந்து கலந்து விட்டதாக அந்த பெண் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பி உள்ளார்.

டீ குடித்த சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு வயிற்று குமட்டலுடன் தலை சுற்றல் ஏற்படவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயசூர்யா.

தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்த போது காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் எலிமருந்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார் ஜெயசூர்யா.

இதற்கிடையே நீ சாகமாட்டாய், ஏனென்றால் காலாவதி தேதி முடிந்த எலி மருந்தை தான் கொடுத்துள்ளேன், இதனை யாரிடமும் சொல்லாதே என மெசேஜ் அனுப்பி உள்ளார் அந்த பெண்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது சிறுநீரகம் செயலிழந்து இருப்பதும் மஞ்சை காமாலை நோய்க்கு உள்ளாகியிருப்பதும் தெரிய வந்தது.

சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பின்னரும் ஜெயசூர்யாவின் நிலைமை சீரடையாததால், நீதிபதியை வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர் போலீஸார்.

அப்போது தான், எலிமருந்து கலந்த டீயை கொடுத்தது காதலி தான் எனவும், அவருடன் வாட்ஸ் அப்பில் உரையாடிய முழு தகவல்களையும் காண்பித்துள்ளார் ஜெயசூர்யா.

அதன்பிறகே, தனது மகன் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை கொலை முயற்சியில் சிக்கியுள்ளார் என அவரது குடும்பத்தினருக்கே தெரிய வந்துள்ளது.

ஜெயசூர்யாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் திருவெண்னைய் நல்லூர் போலீஸார்.

காதலியின் விபரீத எண்ணத்தால் 24 வயது மாணவன் தற்போது உயிருக்காக போராடி வருகிறார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி” மூன்றாவது காதலனை கொல்ல  முதல் இரு காதலன்களுடன் ஸ்கெட்ச்..! ஒரு பெண்ணுக்கு இத்தனை போட்டியா ?!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies