முகப்பு
அதே நெனப்பில் வாய்கொடுத்து வம்பில் சிக்கிய ரோந்து காவலர்..! இந்த முறை போலீஸ் சிக்கிட்டாங்க..! அந்த பொண்ணு...வழக்கறிஞராம்பா...
Feb 21, 2025 04:27 AM
250
வாய்கொடுத்து வம்பில் சிக்கிய ரோந்து காவலர்..!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஜோடியாக காரில் இருந்த இருவர், ரோந்து போலீசாரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறி , இருவரையும் கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்ததை எவரும் மறந்திருக்க முடியாது..!
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில்.. ஒரு பெண்ணும் ஆணும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, அதே பாணியில் விசாரணையை தொடங்கி உள்ளார் ரோந்து காவலர் ராஜ்குமார். அவர்களை நோக்கி நீங்கள் இருவரும் கணவன் மனைவியா? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஒரு பெண்ணை பார்த்து எப்படி, இது போல கேட்கலாம் ? என்று அங்கிருந்த பெண் கொதித்தெழுந்தார்.
தான் சொல்வதை கேட்கும்படி கூறிய காவலரோ, இருட்டில் தனியாக இருந்ததால் கேட்டதாக கூறி சமாளிக்க, எங்கே இருட்டு இருக்கு ? என்று வெளிச்சமாக இருப்பதை தனது செல்போன் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டினார்.
அந்த காவலர் கேட்டது சட்டத்தின் படி தவறு என்பதை தனது நறுக்கான கேள்விகளால் சுறுக்கமாக சுட்டிக்காட்டினார் அந்த பெண், இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் ரோந்து காவலர் ராஜ்குமார்.
இதையடுத்து சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான திலோத்தமா , சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னர் தான் ரோந்து காவலர் வாய் கொடுத்து வம்பிழுத்தது, வழக்கறிஞர் திலோத்தம்மாவிடம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர் ராஜ்குமாரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. உடனடி நடவடிக்கைக்கு காவல் ஆணையர் அருணுக்கு நன்றி தெரிவித்தார் வழக்கறிஞர் திலோத்தம்மா.
அந்த பெண்ணுக்கு நல்லது தானே செய்தார், அவர் மீது நடவடிக்கை ஏன் ?என்று காவலர் ராஜ்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காவலர் இடமாற்றத்துக்காண காரணத்தை விளக்கி உள்ள காவல் இணை ஆணையர் விஜயகுமார், பொது இடங்களில் பேசிக் கொண்டிருப்போரிடம் விசாரணை என்ற பெயரில் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இரவு நேரங்களில் வாகன சோதனையின் போதும், விசாரிக்கும் போதும் தங்களை எதிர்த்து கேள்வி கேட்போரை வீடியோ எடுத்து ஆத்திரமூட்டும் வகையில் ட்ரிகர் செய்வது சில போலீசாரின் வாடிக்கை, இந்த முறை அவர்களின் ராஜ தந்திரம், வழக்கறிஞர் திலோத்தம்மாவிடம் எடுபடவில்லை என்கின்றனர் விவரம் அறிந்த வழக்கறிஞர்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu