தமிழ்நாடு
பெண் போலீசிடம் அத்துமீறிய காமுக கொள்ளையன் ஆக்டிங்... பரபரப்பு வாக்குமூலம் என்ன ?
Feb 18, 2025 02:08 AM
421
பெண் போலீசிடம் அத்துமீறிய காமுக கொள்ளையன் ஆக்டிங்... பரபரப்பு வாக்குமூலம் என்ன ?
சென்னையில் மின்சார ரயில்களை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.நள்ளிரவு நேரங்களிலும் ரயில் பயணமே அவர்களுக்கு கை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் பணி முடித்துவிட்டு இரவு 11 மணி அளவில் பழவந்தாங்கலில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
எழும்பூரில் இருந்து மின்சார ரயிலில் ஏறி பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்துள்ளார். ரயில் நிலையத்தை விட்டு வெளியேறு பகுதியில் நள்ளிரவில் இருட்டான பகுதியில் மறைந்திருந்த ஆசாமி ஒருவன் பின்பக்கமாக வந்து பெண் காவலரிடம் செயின் பறித்ததோடு, அவரை மடக்கிப்பிடித்து கீழே தள்ளி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதால் அவர உதவி கேட்டு அலறியுள்ளார்.
அந்த பகுதியையொட்டி அமைந்துள்ள வீடுகளில் உள்ள இளைஞர்கள் ஓடி வந்து அந்த போதை ஆசாமியிடம் இருந்து பெண் காவலரை மீட்டுள்ளனர். அவனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுக்க ஆரம்பித்ததுமே அவன் மயக்கம் வந்தது போல படுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயக்கம் அடைந்தது போல படுத்துக்கிடந்த அந்த ஆசாமியை தோளில் தூக்கிப்போட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அவன் பெயர் சத்தியாபாலு என்பது தெரியவந்தது. பிரிண்டிங்பிரஷ் ஒன்றில் பணியாற்றிவந்த அவன், கடன்பிரச்சனையால் , செயின்பறிக்க திட்டமிட்டதாக கூறப்படுகின்றது. அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு குவாட்டர் மது வாங்கி அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்து பழவந்தாங்கல் ரயில்நிலையத்தில் இறங்கி உள்ளான். இருட்டான பகுதியில் பதுங்கி இருந்த அவன், பெண் காவலர் வருவதைபார்த்து அவரது பின்புறமாக சென்று வாயை பொத்தி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றதாக கூறப்படுகின்றது. அபோது சுதாரித்துக் கொண்ட பெண் காவலர் தன்னை காலால் எட்டி உதைத்து, அய்யோ அம்மா எனகத்தியதால் வெறிதலைக்கேறி அவரை கீழேதள்ளி மேலே ஏறி அமர்ந்து வாயை பொத்தியதாகவும் அவன் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்த போது ரயில் நிலையத்திலிருந்து பெண்ணின் அபயக் குரல் கேட்டு தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு ஓடிச்சென்று மீட்டதாக இளைஞர் ஜோஸ்வா தெரிவித்தார்
ரயில் நிலையம் எதிரிலேயே இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுக்காப்பாற்ற சூழல் நிலவுவதாக அப்பகுதி வாசிகள் குற்றஞ்சாட்டினர்
இந்த ரெயில் நிலையம் மட்டுமல்ல அனைத்து ரெயில் நிலையங்களிலும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu