RECENT NEWS

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

BIG STORIES

“நீங்க தாலி கட்டுங்கண்ணே... ஓடிப்போகாம நாங்க பாத்துக்கறோம்.. ” மாணவியை கடத்திய மக்கு பாய்ஸ்..! தாலியை கழட்டி வீசிச்சென்ற சம்பவம்

Feb 02, 2025 01:51 AM

263

“நீங்க தாலி கட்டுங்கண்ணே... ஓடிப்போகாம நாங்க பாத்துக்கறோம்.. ”
மாணவியை கடத்திய மக்கு பாய்ஸ்..! தாலியை கழட்டி வீசிச்சென்ற சம்பவம்

மாணவியை கடத்திய மக்கு பாய்ஸ்..! தாலியை கழட்டி வீசிச்சென்ற சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், ஏ.கே சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வாகனத்தில் வந்திறங்கிய அந்த மாணவி தனது தோழிகள் இருவருடன் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த மாருதி எக்கோ காரில் இருந்த மர்ம ஆசாமிகள் மாணவியை கையை பிடித்து இழுத்து காரில் ஏற்றினர். தடுக்க முயன்ற தோழியையும் காருக்குள் இழுத்து போட்டு கடத்திச்சென்றனர்.

இருவருடன் சென்ற மற்றொரு தோழி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே மாணவியின் தோழியை வழியில் காரில் இருந்து தள்ளி விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அக்கம்பக்கத்து ஊர்களில் தீயாய் பரவியது. மாணவியின் பெற்றோர் தனது மகளை விரைந்து மீட்டு தரக் கோரி ராசிபுரம்-சேந்தமங்கலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தினால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் சமரசம் பேசி மாணவியை கூடிய விரைவில் மீட்பதாக உறுதி அளித்தனர்

ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் மாணவியை தூக்கிச்சென்றது, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாணவியை பெண் கேட்டு வந்த தமிழ்பாண்டியன் என்பது தெரியவந்ததால் அவனது செல்போன் நம்பரை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

மாணவியை கடத்திச்சென்ற காரை கிருஷ்ணகிரி அருகே போலீசார் மடக்கிய நிலையில் காருக்குள் யாரும் இல்லை, ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது, காரில் வந்தவர்களை ஓசூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இறக்கி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டதோடு, மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய தமிழ்பாண்டியன், அவனது கூட்டாளிகளான தமிழ்செல்வன், கார்த்தி, ரமேஷ் ,பூவரசன், மாயக்கண்ணன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் மாணவியின் வீட்டில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தங்கப்பாண்டியன் கட்டுமான பணி மேற்கொள்ள வந்துள்ளார். அப்போது நமது வீட்டில் வேலைப்பார்க்கிறவர் என்ற முறையில் மாணவி நட்பாக பழகி உள்ளார். அதனை தவறாக எடுத்துக் கொண்டு மாணவியை ஒரு தலையாக காதலித்துள்ளார் தங்க பாண்டியன். வீட்டு வேலை முடிந்த பின்னர் மாணவி அவரை கண்டு கொள்ளாத நிலையில், தனது மனைவி இறந்து விட்டதால் இரு குழந்தைகளுடன் தனிமையில் கஷ்டப்படுவதாக கூறி மாணவியை 2 வது திருமணம் செய்வதற்கு வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் தமிழ் பாண்டியனை விரட்டி விட்டதாக கூறப்படுகின்றது. அவரது கூட்டாளிகளிடம் சம்பந்தப்பட்ட மாணவி தன்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், வீட்டில் உள்ளவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தமிழ் பாண்டியன் விட்ட கதையை நம்பி கூட்டாளிகள் மாணவியை கடத்துவதற்கு வண்டியுடன் தயாராகி உள்ளனர்.

மாணவியை கடத்தும் போது உடன் வந்த தோழி , கடத்தல் கும்பலை சேர்ந்த உள்ளூர் இளைஞரை அடையாளம் கண்டதால் அவரையும் சேர்த்து காருக்குள் இழுத்து போட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்குள்ளேயே கிரைம் ரேட் கூடுவதை அறிந்து அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். மாணவியை மிரட்டி லாட்ஜில் அடைத்து வைத்தனர். அங்கு சென்ற பின்னர் தான் மாணவி தமிழ் பாண்டியனை காதலிக்கவில்லை என்பது கூட்டாளிகளுக்கு தெரியவந்துள்ளது.

இருந்தாலும் கூட்டாளிகள் சிலர் அந்த மாணவியின் கையை மடக்கிப்பிடித்துக் கொள்ள தமிழ் பாண்டியன் மஞ்சள் கயிற்றால் ஆளான தாலியை மாணவியின் கழுத்தில் கட்டி உள்ளார். தமிழ் பாண்டியனை திருமணம் செய்வதில் மாணவிக்கு துளி கூட விருப்பமில்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

“மாணவியின் கழுத்தில் தாலி கட்டி விட்டோமே... மனைவியான பின்னர் அவர் இனி எப்படி நம்மை விட்டு பிரிந்து செல்வார்..?” என்ற மிதப்பில் இருந்த தமிழ் பாண்டியனின் முட்டாள் தனமான எண்ணத்தில் இடியை இறக்கியது மாணவியின் முடிவு. கட்டாயப்படுத்தி தனது கழுத்தில் கட்டப்பட்ட மஞ்சள் கயிற்றை கழட்டி வீசி விட்டு தனது பெற்றோருடன் வீட்டுக்கு புறப்பட்டார் அந்த மாணவி. தமிழ் சினிமாக்களின் தாலி சென்டிமெண்டை நம்பி மாணவியை கடத்திச் சென்று தாலி கட்டிய தமிழ்பாண்டியனின் முட்டாள் தனத்தால் உடனிருந்த மக்கு பாய்ஸ் அனைவரும் கம்பி எண்ணி வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News