RECENT NEWS

உள்கட்சி விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ். கருத்து

உள்கட்சி விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ். கருத்து

Feb 12, 2025

உள்கட்சி விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ். கருத்து

உள்கட்சி விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ். கருத்து

Feb 12, 2025

தமிழ்நாடு

ஐயோ... போச்சே.. போச்சே.. வாயிலும் வயிற்றிலும் அடித்து அலறிய நடிகர் கஞ்சா கருப்பு..! விருத காணோம்.. பணத்த காணோம்...

Jan 26, 2025 01:25 AM

45

ஐயோ... போச்சே.. போச்சே.. வாயிலும் வயிற்றிலும் அடித்து அலறிய நடிகர் கஞ்சா கருப்பு..!
விருத காணோம்.. பணத்த காணோம்...

வாயிலும் வயிற்றிலும் அடித்து அலறிய நடிகர் கஞ்சா கருப்பு..!

காமெடியனாகவே பார்த்து பழக்கப்பட்ட நடிகர் கஞ்சா கருப்பு, தனது பொருட்கள் திருடு போய் விட்டதாக கூறி கதறி ஒப்பாரி வைத்த காட்சிகள் தான் இவை..!


பருத்திவீரன் படத்தின் காமெடியால் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் கஞ்சாகருப்பு . மதுரை வட்டார வழக்கு பேச்சால் பேமஸ் ஆன கஞ்சா கருப்பு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டதோடு சொந்தமாக பங்களா வீடு ஒன்றையும் கட்டி குடியேறினார். வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் சொந்தபடம் எடுத்து மொத்த சொத்தையும் இழந்து வீதிக்கு வந்தார் கஞ்சா கருப்பு.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பிளாட்டில் மாதம் 20 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அண்மைகாலமாக வாடகை கொடுக்காமல் இழுத்தடித்த கஞ்சாகருப்பு வீட்டையும் காலி செய்ய மறுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் ரமேஷ் தன்னிடம் இருக்கும் சாவியால் வீட்டை திறந்து அவரது வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தனி அறையில் அடுத்து வைத்துவிட்டு, வீட்டை வெள்ளை அடித்து புதுப்பித்ததாக தெரிவித்தார். 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள கஞ்சா கருப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார்


தனது வீட்டின் பூட்டை உடைத்து உரிமையாளர் ரமேஷ் அத்துமீறி நடந்து கொணடதாக கஞ்சாகருப்பு புகார் அளித்த நிலையில் அவரையும் வீட்டின் உரிமையாளரையும் அழைத்துக் கொண்டு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றனர். தனது பொருட்கள் குவிந்து கிடப்பதை பார்த்து பதறிபோன கஞ்சா கருப்பு பல பொருட்கள் சேதமடைந்து இருப்பதாகவும் எல்லாம் போச்சே...போச்சே.. என்று கதறி ஒப்பாரி வைத்தவாறே ஒவ்வொரு அறையாக ஓடத்தொடங்கினார்



தமிழக அரசு தனக்கு வழங்கிய கலைமாமணி விருது, தான் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட பல பொருட்களை காணவில்லை என்று உதவி காவல் ஆய்வாளரிடம் தெரிவித்தார் கஞ்சா கருப்பு



எந்தெந்த பொருள் காணவில்லை என்பதை சரிபார்த்து எழுதி தருமாறு கேட்டுக் கொண்ட போலீசார் கஞ்சா கருப்புவை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது மிரட்டல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் , தான் யாரையும் மிரட்டவில்லை என்றும் தன்னை போல மிமிக்கிரி கலைஞர்களை கொண்டு பேசி இருப்பதாக தெரிவித்தார்.



அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தவித்த கஞ்சா கருப்பு படபடப்பாக இருப்பதாகவும், தனக்கு மயக்கம் வருவதாகவும் கூறி அங்கிருந்து நழுவிச்சென்றார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இவன்லாம் எங்க ஐ.ஏ.எஸ் ஆகப்போறான்...” காதலியின் மம்மியை கொன்ற காதலன்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News