இந்தியா
13 பேரை பலிகொண்ட ரயில் விபத்து நிகழ்ந்தது எப்படி?
Jan 23, 2025 06:46 AM
146
13 பேரை பலிகொண்ட ரயில் விபத்து நிகழ்ந்தது எப்படி?
மகாராஷ்டிராவில் 13 பேரை பலிகொண்ட ரயில் விபத்தில் ஓட்டுநர்களின் துரிதமாக நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று மாலை லக்னோவில் இருந்து மும்பை சென்றுகொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். இதையடுத்து ஜல்கானில் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
தீ விபத்து பயத்தால் வேகமாக கீழே இறங்கி தண்டவாளம் வழியே அவர்கள் ஓட முயன்றபோது கர்நாடக விரைவு மோதியுள்ளது. இதில் 13 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்தனர்.
சம்பவம் நடைபெற்ற வழித்தடம் வளைவான இடம் என்பதால் கர்நாடக ரயிலின் ஓட்டுநர்களால் பயணிகளை சரிவர பார்க்கமுடியவில்லை என்பதை ரயில்வேத்துறை கண்டறிந்துள்ளது.
ஆனாலும் கர்நாடக ரயில் ஓட்டுநர்கள் உடனே பிரேக் பிடித்தும் போதிய தூர இடைவெளி இல்லாததால் பயணிகள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேகமாக செல்லும் ரயிலை உடனே நிறுத்த குறைந்தபட்சம் 650 மீட்டர் தூரம் தேவைப்படும் நிலையில், ஓட்டுநர்கள் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News