தமிழ்நாடு
தோசையில் விஷம் வைத்து மகனின் கதையை முடித்த தாய் ஹைலைட்டே படையல் தானாம்..! கத்தியால் குத்திய காதலியும் சிக்கினார்..
Jan 22, 2025 01:09 PM
424
தோசையில் விஷம் வைத்து மகனின் கதையை முடித்த தாய் ஹைலைட்டே படையல் தானாம்..!
விழுப்புரம் அருகே உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் லாரி ஓட்டுனர் சடலமாககிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது தாய் மற்றும் காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். போதைக்கு அடிமையாகி தொல்லை கொடுத்த மகனுக்கு, தாய் தோசையில் டுவிஸ்ட் வைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
தோசை நல்ல இருக்கும்மா.. இன்னொன்னு கொடு... என்று தாயிடம் ஆசையாய் வாங்கிச்சாப்பிட்ட லாரி ஓட்டுனர் விசுவலிங்கம் உயிரிழந்த நிலையில், மகனின் நினைவாக நடு வீட்டில் படையலிட்டு சாமி கும்பிட்ட தாய் முனியம்மாளை கொலை வழக்கில் கைது செய்துள்ளனர் போலீசார்..!
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள சீனிவாசபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 28 வயதான லாரி ஓட்டுனர் விசுவலிங்கம் . இவர் கடந்த 17-ஆம் தேதி வீட்டில் உயிரிழந்து கிடந்தார். உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டதாக வளவனூர் போலீசாரிடம் தாய் முனியம்மாள் புகார் அளித்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் , கத்தியால் குத்திய ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் பிணகூறாய்வு அறிக்கையில் கொலை செய்யப்பட்ட விசுவலிங்கம் விஷம் கலந்த தோசை சாப்பிட்டதால் உயிரிழந்ததாகவும், அதன் பின்னரே அவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விசுவலிங்கத்தின் தாயிடம் விசாரிக்க அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். வீட்டில் தனது மகனின் நினைவாக படையலிட்டு முனியம்மாள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அவரிடம் நடத்திய விசாரணையில் , விடாக்குடியால், பணம் கேட்டு தீரா தொல்லைக்கொடுத்து வந்த தனது மகனை தோசையில் விஷம் கலந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
உடலில் கத்திக்குத்து காயங்கள் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்த போது, தனது மகன், மேலத்தாழனூரைச் சேர்ந்த செல்வி என்ற திருமணமான பெண்ணுடன் தவறான பழக்கத்தில் இருந்ததாகவும், காதலி என்றும் பாராமல் அவரையும் விசுவலிங்கம் போதையில் தொல்லைக் கொடுத்து வந்ததால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு அவனை கொலை செய்ததாக தெரிவித்தார். தோசை சாப்பிட்டு மயங்கி கிடந்த தனது மகன் உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக செல்வி கத்தியால் குத்தியதாகவும், போலீசாரிடம் யாரோ ஒருவர் கொலை செய்தது போல நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை மேலத்தாழனூரில் வயல்வெளியில் வைத்து செல்வியை வளவனூர் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசுவலிங்கம் தினமும் மது போதையில் வீட்டில் தகராறு செய்ததாகவும், பொங்கல்
பண்டிகையின் போது மது போதையில் நண்பர்களுடன் வந்து தன்னை தாக்கி துன்புறுத்தியதோடு, தனது வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்துச் சென்றதால் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து தாய் முனியம்மாள், காதலி செல்வி ஆகிய இருவரையும் கொலை வழக்கில் கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News