RECENT NEWS

இயற்கை விவசாயம் செய்யும் தஞ்சாவூர் கல்லூரி மாணவி... பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று சாதனை...

இயற்கை விவசாயம் செய்யும் தஞ்சாவூர் கல்லூரி மாணவி... பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று சாதனை...

Feb 13, 2025

இயற்கை விவசாயம் செய்யும் தஞ்சாவூர் கல்லூரி மாணவி... பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று சாதனை...

இயற்கை விவசாயம் செய்யும் தஞ்சாவூர் கல்லூரி மாணவி... பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று சாதனை...

Feb 13, 2025

தமிழ்நாடு

அந்த ஒரு நிமிட தவறு... உயிரோடு கருகிய பெண்..! இதை மட்டும் செய்யாதீர்கள்..!

Jan 22, 2025 01:25 AM

49

அந்த ஒரு நிமிட தவறு... உயிரோடு கருகிய பெண்..! இதை மட்டும் செய்யாதீர்கள்..!

உயிரோடு கருகிய பெண்..! இதை மட்டும் செய்யாதீர்கள்..!

மாண்டேஜ்(())

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கீழ்வடுகன்குட்டையை சேர்ந்தவர் சேகர் . தனியார் விசைத்தறி கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்காக சேகரின் மகன்கள் பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தனர். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் சங்கீதா சமையல் செய்வதற்காக அடுப்பில் கியாஸை திறந்து லைட்டரால் பற்ற வைத்தார். லைட்டர் எரியாததால் தீப்பெட்டியைத் தேடினார். கவனக்குறைவாக அடுப்பில் திறந்த கியாஸை ஆஃப் செய்ய மறந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

வீட்டில் ஒரு அறையில் இருந்து தீப்பெட்டியை எடுத்து வந்து கியாஸ் அடுப்பில் தீப்பற்ற வைத்தார். அந்த ஒரு நிமிடத்திற்குள்ளாக கியாஸ் கசிந்து சமையலறை முழுவதும் கியாஸ் பரவி இருந்ததால் குபீரென்று பற்றிய தீ சங்கீதாவின் சேலையில் பற்றியது. உடல் முழுவதும் தீ பரவியதால் உயிரை காப்பாற்றிக் கொள்ள சங்கீதா கூச்சலிட்டபடியே ஓடியுள்ளார்.

வலி தாங்க முடியாமல் சங்கீதா அலறி கூச்சலிட்டபடி சமையலறையில் இருந்து வெளியே ஓடி வருவதை கண்ட அவரது கணவர் சேகர் மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி காப்பாற்றி சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சங்கீதாவுக்கு 100 சதவீத தீக்காயமும், அவரது கணவர் சேகருக்கு 50 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் அடுப்பை உபயோகிக்கும் இல்லத்தரசிகள் வெளிக்காற்று உள்புகும் வகையில் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் வீட்டில் சிலிண்டரை திறந்தே வைத்திருக்கும் செயலை கைவிடுங்கள் என்றும் எச்சரித்துள்ள தீயணைப்புத்துறையினர், கியாஸ் அடுப்பை ஒரு முறை பற்ற வைத்து தீப்பற்ற வில்லை என்றால் உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளதா என்று வாசனையை நுகர்ந்து பார்த்து அடுப்பை பற்ற வைக்க முயற்சிக்கலாம் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.








SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News