RECENT NEWS

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

BIG STORIES

திருச்செந்தூர் கடற்கரையில் பாதியை காணவில்லை..! இனியாவது விழித்துக் கொள்வார்களா..? திடீர் போராட்டம் - கனிமொழி விசிட்

Jan 19, 2025 01:34 AM

4213

திருச்செந்தூர் கடற்கரையில் பாதியை காணவில்லை..! இனியாவது விழித்துக் கொள்வார்களா..? திடீர் போராட்டம் - கனிமொழி விசிட்

திருச்செந்தூர் கடற்கரையில் பாதியை காணவில்லை..! இனியாவது விழித்துக் கொள்வார்களா..?

திருச்செந்தூர் கோவிலின் கடற்கரை மணற்பரப்பு கடந்த சில தினங்களாக சுருங்கி வந்த நிலையில் 7 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் கடலில் இறங்கி நீராட இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி இந்து முன்னனி அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அங்கு அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

லட்சோப லட்சம் மக்கள் கடல் அலைபோல திரள முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் அரங்கேறும் இடமான திருஞ்செந்தூர் கடற்கரை மணல் பரப்பின் பாதியை காணவில்லை... என்பது தான் பக்தர்களை கலக்கமடைய செய்துள்ளது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் படுத்து உறங்கி வேண்டுதலை நிறைவேற்றும் இடமாகவும், பகதர்கள் புனித நீராட உகந்த வகையிலும் இருந்த கடற்கரையில் பாதி, மண் அரிப்பால் கடலுக்குள் சென்றதை தடுக்க நடவடிக்கை எடுக்காததே, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

பரந்து விரிந்த கடற்பரப்பு இன்று பாதியாக சுருங்க காரணம், அமலிநகர் பகுதியில் கடலுக்குள் கற்களை கொட்டி அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவால் உண்டான கடல் சீற்றம் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்

கடலோர பாதுகப்பு குழுமத்தின் அனுமதி இன்றி தூண்டில் வளைவு அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய இந்து முன்னணியினர் திருச்செந்தூர் முருகன் கோவிலை காக்க கோரி பிள்ளையார் சன்னதி முன்பு திடீர் வேண்டுதல் போராட்டத்தையும் நடத்தினர்

இந்த நிலையில் தான் தூத்துக்குடி எம்.பி கனிமொழி அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் திருச்செந்தூர் கோவில் கடற்கரையை ஆய்வு செய்தனர்

முன்னதாக 7 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்ட காரணத்தால் மேல் இருந்து பக்தர்கள் தவறி விழுந்து விடக்கூடாது என்று கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, கடற்கரையின் இந்த நிலையை முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News