RECENT NEWS

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

தமிழ்நாடு

காதலால் கலவரம் மயங்கி விழுந்த பெண் எஸ்.ஐ ஓடிப் போன மகளுக்காக மல்லுக்கட்டு

Jan 18, 2025 05:31 AM

484

காதலால் கலவரம் மயங்கி விழுந்த பெண் எஸ்.ஐ
ஓடிப் போன மகளுக்காக மல்லுக்கட்டு

காதலால் கலவரம் மயங்கி விழுந்த பெண் எஸ்.ஐ ஓடிப் போன மகளுக்காக மல்லுக்கட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்த தங்கள் மகளை மீட்கச்சென்ற பெண் வீட்டாருக்கும், காதலன் குடும்பத்தினருக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.

இது இரு கிராமங்களுக்கு இடையேயான மோதலாக மாறிய நிலையில் சமாதானப்படுத்தச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் மயங்கி விழுந்தார்.

வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்த இளம் பெண்ணால் உண்டான இரு குடும்ப தகராறு, இரு ஊராருக்கு இடையேயான கலவரமானதால் பதற்றம் அடைந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மயங்கி சரிந்த காட்சிகள் தான் இவை..!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகனேஸ்வரன். மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைப்பார்த்து வரும் சுகனேஸ்வரனும், பண்ணந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யாவும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

மகளின் காதல் விவகாரம் தெரிந்ததால் வேறொரு வரன் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர். இதனையறிந்த ஐஸ்வர்யா தனது காதலன் சுகனேஸ்வரன் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கோபத்துடன் அகரத்திற்கு சென்ற ஐஸ்வர்யாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், ஆள் தெரியாமல் சுகனேஸ்வரனுக்கு பதிலாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஷ்வாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், விஷ்வாவின் உறவினர்கள் ஐஸ்வர்யாவின் பெற்றோர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்த பண்ணந்தூர் கிராமத்தினர் அகரம் நோக்கி வந்தனர். சாலையில் வருவோர், டூவீலரில் வருவோர் என ஒவ்வொரு மூலையிலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் களேபரமாக மாறியது அகரம் கிராமம்.

களேபர தகலறிந்து உதவி ஆய்வாளர் சங்கீதா தலைமையிலான நாகரசம்பட்டி போலீசார் தாக்குதலை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக எஸ்.ஐ சங்கீதாவே எங்கெல்லாம் தாக்குதல் நடந்ததோ அங்கெல்லாம் என்று விலக்கி விட்டார். ஓடி, ஓடி சமாதானப்படுத்திய எஸ்.ஐ சங்கீதாவிற்கு ஒரு கட்டத்தில் மூச்சடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார்.

முகத்தில் தண்ணீரை தெளித்தும், நெஞ்சை தடவிக்கொடுத்தும் ஆசுவாசப்படுத்திய பிறகு அவரை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் சக காவலர்கள்.
இதனையடுத்து, டி.எஸ்.பி முத்துகிருஷ்ணன் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்டது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News