RECENT NEWS

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

Feb 12, 2025

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

Feb 12, 2025

BIG STORIES

போலீசுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கி பூட்டிக் கொண்ட விசிக Ex மாவட்ட செயலாளர்..! மனைவியின் கோஷம் தான் ஹைலைட்..!

Jan 18, 2025 01:32 AM

864

போலீசுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கி பூட்டிக் கொண்ட விசிக Ex மாவட்ட செயலாளர்..! மனைவியின் கோஷம் தான் ஹைலைட்..!

போலீசுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கி பூட்டிக் கொண்ட விசிக Ex மாவட்ட செயலாளர்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீசுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கிக் கொண்ட விசிக பிரமுகர், போலீசார் கதவை உடைக்க தயாரானதால் 5 மணி நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு போலீசாரை ஆபாசமாக பேசி வம்பிழுத்து வழக்கு வாங்கியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் பாஸ்கரன். இவர் தான் , தற்போது மீண்டும் போலீசாரின் வழக்கில் சிக்கி வீட்டுக்குள் பயந்து பம்மியதாக கூறப்படுகின்றது ..!

53 வயதான பாஸ்கர் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து அவர் மீதான புகார்கள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. இந்த நிலையில் வந்தவாசி தாலுக்கா தென்னாத்தூர் கிராமத்தில் முருகன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் கிருஷ்ணன் என்பவரின் தரப்பிற்கு ஆதரவாக பாஸ்கரன் களமிறங்கியதாக கூறப்படுகின்றது. தனது பேச்சுக்கு கட்டுபடாத முருகன் என்பவரின் நிலத்தை சேதப்படுத்தியதாகவும் மோட்டர் பம்பு உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் பாஸ்கர் மீது தேசூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் பாஸ்கரன், கிருஷ்ணன், வினேத் பிரியா உள்ளிட்ட 5பேர் மீது
பொது சொத்து சேதப்படுத்துதல், நிலத்தை சேதப்படுத்துதல் , திருட்டு உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை விசாரணைக்கு அழைத்தனர். அவர் வராததால் வந்தவாசி டி.எஸ்.பி கங்காதரன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாஸ்கரன் வீட்டை சுற்றிவளைத்தனர். விசிகவினர் தாங்கள் சட்டத்தை கரைச்சி குடிச்சிருப்பதாக கூறி போலீசாரை தடுத்தனர்

போலீசாரை கண்டதும் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு உள்ளே பதுங்கிய பாஸ்கரன், வெளியே வர மறுத்து அடம்பிடித்ததோடு ஜன்னல் வழியாக பேசிய அவர் , தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்

அப்போது பின்னால் இருந்து பேசிய தனது தாயையும், மனைவியையும் பேசாமல் இருக்க சொல்லி கட்டிலில் தள்ளி அமரவைத்தார்

காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் ஒன்றை விசிக ஒன்றிய செயலாளர் அசோக் என்பவர், கவனக்குறைவாக எடுத்துச்சென்றதாகவும் , அவர் மீது பைக் திருடியதாக போலீசார் வழக்கு போட்டு விட்டதாகவும் உரிமைக்குரல் எழுப்பினார் பாஸ்கரன்

5 மணி நேரம் கடந்த நிலையில் , ஆரணி கோட்டாச்சியர் பாலசுப்பிமணியன் வட்டாச்சியர் கௌரி ஆகியோர் முன்னிலையில் வீட்டு கதவை உடைத்து கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து கதவை உடைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பாஸ்கரன் வெளியே வந்து போலீசாரிடம் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து அழைத்துச்செல்ல தயாரானதும், பாஸ்கரனின் பின்னால் வந்த அவரது மனைவி வீரவணக்கம் என்று கோஷமிட்டதால் அவரை பாஸ்கரன் கையை காட்டி கோசத்தை மாற்ற கூறினார்..

தொடர்ந்து கோசமிட்ட அவர் “அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்..” என்று கணவனை உசுப்பேற்றும் வகையில் கோசமிட்ட தோடு, அவரை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போங்க சார்ன்னு.. வழியனுப்பி வைத்தார்

பாஸ்கரனை போலீஸ் வேனில் ஏற்றிய போது விசிக கட்சியினர் , போலீசாரையும், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இவன்லாம் எங்க ஐ.ஏ.எஸ் ஆகப்போறான்...” காதலியின் மம்மியை கொன்ற காதலன்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News