இந்தியா
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் இண்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கை 90 கோடியைக் கடக்கும் எனத் தகவல்
Jan 17, 2025 06:21 AM
73
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் இண்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கை 90 கோடியைக் கடக்கும் எனத் தகவல்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் இண்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கை 90 கோடியைக் கடக்கும் என இந்திய இண்டர்நெட் மற்றும் மொபைல் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மிக அதிகபட்சமாக கேரளா மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தினமும் சராசரியாக 90 நிமிடங்களுக்கு இண்டர்நெட் பயன்படுத்துவதாகவும், பயனாளர்களில் 53 சதவீதம் பேர் ஆண்கள், 47 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்டிங், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு போன்றவற்றுக்காக 75 சதவீதம் பேரும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகளுக்காக 74 சதவீதம் பேரும் இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
ஆன்லைன் படிப்புக்காக 3 சதவீதம் பேர் மட்டுமே இண்டர்நெட்டை பயன்படுத்தும் நிலையில், ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஓடிடி தளங்களுக்காக அதிகம் பேர் பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News