தமிழ்நாடு
கதறி அழுத “பாம் சரவணன்” மனைவியின் ராஜதந்திரம்.. போலீசிடம் பலிக்காதது ஏன்? 7 வருட ரகசியம் அம்பலமானது..!
Jan 17, 2025 01:20 AM
466
கதறி அழுத “பாம் சரவணன்” மனைவியின் ராஜதந்திரம்
சென்னையில் போலீசார் மீது பாம் வீச முயன்றதால் துப்பாக்கியால் சுடப்பட்ட சென்னை ரவுடி பாம் சரவணன், தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக 7 வருடங்களுக்கு முன்பு பிரபல ரவுடியை கடத்தி கொலை செய்து சடலத்தை சாம்பலாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரால் சுடப்பட்டு காயத்துடன் அரசு மருத்துவமனையில் கதறிக் கொண்டிருக்கும் ரவுடி பாம் சரவணன் இவர் தான்..!
ஆந்திராவில் துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்து வரப்பட்ட பாம் சரவணன். முல்லை நகர் சுடுகாட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து தருவதாக கூறியதாகவும், அவனை அங்கு அழைத்துச்சென்ற போது தங்கள் மீது பாம் வீசி தப்பிக்க நினைத்ததால் அவரது காலில் சுட்டு பிடித்ததாக காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் தெரிவித்தனர். இது முழுக்க முழுக்க நாடகம் என்று பாம் சரவணனின் மகாலட்சுமி மனைவி போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.
விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோயம்பேட்டில் மாயமான ரவுடி பன்னீர் செல்வம் வழக்கில் துப்பு துலங்கியதாக தெரிவித்த போலீசார் பாம் சரவணன் மீது 6 கொலை, 6 கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு என 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.
தென்னு.. சரவணன்... என்ற பெயருடன் வட சென்னையை கலங்கடித்த ரவுடி சகோதரர்களில் ஆதி தென்னரசு 2015ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக இருந்த ஆதி தென்னரசு கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தனது அண்ணன் கொலையில் தொடர்புடைய ரவுடி பன்னீர் செல்வம் வழக்கில் சேர்க்கப்படாமல், சுதந்திரமாக சுற்றுவதை அறிந்து , அவரை கடத்திச்சென்ற பாம் சரவணன், பன்னீர் செல்வத்தை எரித்து கொலை செய்து சாம்பலை தண்ணீரில் கரைத்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
7 வருடங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் இருந்து ரவுடி பன்னீர் செல்வத்தை கடத்தி வருவதற்கு வில்லிவாக்கம் வழக்கறிஞர் ராஜேஷ் , ரவுடிகள் வீரா, அப்பு ஆகியோர் உதவியாக இருந்ததாகவும், அவர்கள் 3 பேரையும் அடுத்தடுத்து எதிர் தரப்பு கொலை செய்து விட்டதாகவும் பாம் சரவணன் தெரிவித்ததாக போலீசார் கூறினர். ஆம்ஸ்ட்ராங்கிற்கு உடன் பிறவா தம்பியாக இருந்து அவரது கட்டளையை நிறைவேற்றிய பாம் சரவணன், நிச்சயம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழிவாங்குவான் என்பதால், அவனது நடவடிக்கைகளை தனிப்படை கண்காணித்ததாகவும், அவன் ஆந்திராவில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் இவன் போலீசில் சிக்குவதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அண்ணா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரவுடிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்திய தாகவும் போலீசார் சுற்றி வளைத்ததும் பாம் சரவணன் அங்கிருந்து தப்பியதாகவும், அங்கிருந்த ரவுடிகள் ஒற்றை கண் ஜெயபால் உள்ளிட்ட ரவுடிகளை கைது செய்த போலீசார் 4 கள்ளதுப்பாக்கிகளையும், 86 தோட்டாக்களையும் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
நகரில் பழிக்கு பழி கொலைகளை தடுக்கும் பொருட்டு மற்ற ரவுடிகளின் நடவடிக்கையையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக போலீசார் பாம் சரவணனை விசாரணைக்கு அழைத்துச்செல்லும் தகவல் கிடைக்கப்பெற்றதும், தனது கணவரை போலீசார் என்கவுண்டர் செய்ய போகிறார்கள் என்று அவரது மனைவி மகாலட்சுமி பேட்டி அளித்தார். அப்படி சொன்னால் போலீசார் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று கருதிய நிலையில் , பாம் சரவணனின் அவசர புத்தியால் , தங்கள் உயிரை காக்க, துப்பாக்கியால் சுட வேண்டியதாகிவிட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News