RECENT NEWS

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

Feb 13, 2025

மாவட்டம்

கட்டபைக்கு ரூ 500 லக்கேஜாம்..! பெண்ணை நடுவழியில் இறக்கி அரசு பேருந்து நடத்துனர்கள் அட்டூழியம்.. தவித்த பெண்ணை காத்த ஆபத்பாந்தவன்

Jan 12, 2025 02:02 AM

508

கட்டபைக்கு ரூ 500 லக்கேஜாம்..! பெண்ணை நடுவழியில் இறக்கி அரசு பேருந்து நடத்துனர்கள் அட்டூழியம்.. தவித்த பெண்ணை காத்த ஆபத்பாந்தவன்

பெண்ணை நடுவழியில் இறக்கி அரசு பேருந்து நடத்துனர்கள் அட்டூழியம்..

பொங்கல் பண்டிகைக்காக கோவையில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்தில் சென்ற பெண்ணிடம் கட்டபைக்கு கூடுதல் லக்கேஜ்ஜாக 500 ரூபாய் கேட்டு நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் வெள்ளகோவில் அருகே அரங்கேறி உள்ளது.

திருச்சி மாவட்டம் கல்லணைபகுதியை சேர்ந்தவர் சர்மிளா, விதவை பெண்ணான இவர் இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் பொங்கல் பண்டிகைக்காக திருச்சியில் உள்ள தனது மகள்களுக்கு புத்தாடைகளும், பலகாரங்களும் வாங்கி கட்டப்பையில் வைத்துக் கொண்டு சொந்த ஊரான திருச்சிக்கு அரசு பேருந்தில் ஏறிச் சென்றார்.

அவர் வைத்திருந்த கட்டபைக்கு 500 ரூபாய் லக்கேஜ் தருமாறு நடத்துனர் கூறியுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் அவரை பல்லடத்தில் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

சிறிது நேரம் கழித்து வந்த மற்றொரு அரசு பேருந்தில் ஏறிய சர்மிளா , இடம் இல்லாத்தால் படிகட்டு அருகே கீழே அமர்ந்து பயணித்துள்ளார்.

வெள்ளக்கோவில் அருகே உணவகம் ஒன்றில் அந்த பேருந்து நிறுத்தப்பட்டதாகவும் அப்போது ஏற்கனவே சர்மிளாவை இறக்கிவிட்ட பேருந்து நடத்துனரும், தற்போது சர்மிளா பயணித்து வந்த பேருந்து நடத்துனரும் ஒன்றாக பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சர்மிளாவிடம் 2 வது பேருந்தின் நடத்துனரும், கட்டபைக்கு 500 ரூபாய் லக்கேஜ் தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த அம்மா தரமுடியாது என்று கூறியதாகவும், வாக்குவாதம் நீடித்த நிலையில் 500 ரூபாய்க்கு பயணச்சீட்டு கொடுங்கள் என்றும் கூறி உள்ளார்.

பணம் மட்டும் வாங்குவதில் குறியாக இருந்த நடத்துனர் , சர்மிளாவை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கி விட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது.

பெண் ஒருவர் அழுது கொண்டே நிற்பதை பார்த்து இரக்கப்பட்ட ஒருவர், சர்மிளாவை தனது காரில் ஏற்றிக் கொண்டு வந்து கரூர் பேருந்து நிலையத்தில் பத்திரமாக இறக்கி விட்டதோடு, அங்கு புகாரும் அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் எப்படி ஒரு பெண்ணை நடுவழியில் இறக்கிவிட முடிந்தது ? எனக்கேட்டு சத்தம் போட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பயணி சர்மிளா தெரிவித்தார்.

கரூரில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி தான் வீட்டுக்கு வந்து விட்டதாக தெரிவித்த சர்மிளா அந்த பேருந்தில் தன்னிடம் நடத்துனர் லக்கேஜ் கேட்கவில்லை என்றும், தன்னை நடுவழியில் இறக்கிவிட்ட இரு பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

டாட்டா காட்டிய மனைவி.. செல்ஃபி பார்த்து ஆத்திரம்.. கதையை முடித்த பள்ளிக் காதல் ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News