தமிழ்நாடு
நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை கொலை செய்த மருமகள்.. விபத்து என நாடகம் ஆடிய மருமகள் சிக்கியது எப்படி..?
Jan 04, 2025 07:34 AM
20
260
நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை கொலை செய்த மருமகள்.. விபத்து என நாடகம் ஆடிய மருமகள் சிக்கியது எப்படி..?
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தனது நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்ட மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம் ஆடிய மருமகள் உடற்கூராய்வு அறிக்கையால் போலீசில் சிக்கினார்.
கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் பகுதியை சேர்ந்த சீராளன் இராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி தேவிகலா தனது மாமியார் கோவிந்தம்மாள் கால் தடுக்கி விழுந்து மயங்கியதாக கூறி கடந்த டிசம்பர் 9 அன்று வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சிகிச்சை பலன் இன்றி கோவிந்தம்மாள் உயிரிழந்த நிலையில், சந்தேகம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் அளித்ததால் உடற்கூராய்வு செய்ததில் உண்மை வெளிவந்த நிலையில், 20 நாட்களுக்கு பிறகு தேவிகலா கைது செய்யப்பட்டார்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News