RECENT NEWS

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

Jan 17, 2025

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

Jan 17, 2025

தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகளை மடக்கிப்பிடித்து தாக்கிய மதுவிலக்கு போலீசார்..!

Dec 27, 2024 02:22 PM

20

4

சுற்றுலாப் பயணிகளை மடக்கிப்பிடித்து தாக்கிய மதுவிலக்கு போலீசார்..!

சுற்றுலாப் பயணிகளை மடக்கிப்பிடித்து தாக்கிய மதுவிலக்கு போலீசார்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உத்தரபிரதேச சுற்றுலா பயணிகளின் பேருந்தை மறித்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், பர்மிட் உள்ளதா ? எனக் கேட்டு ஓட்டுனரையும் சுற்றுலாபயணிகளையும் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது 

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் இருவர் அந்தவழியாக வந்த உத்தரபிரதேச பதிவெண் கொண்ட பேருந்தை மறித்தனர்.

பேருந்து ஓட்டுனரிடம் விசாரித்த போது , தாங்கள் ஆன்மீக சுற்றுலா வந்திருப்பதாக கூறி உள்ளனர்.

இந்த வழியாக மாதேஸ்வரன் மலை செல்வதாக கூறிய நிலையில் பேருந்துக்கு உரிய பெர்மிட் உள்ளதா ? எனக் கேட்டதாகவும், உடனடியாக ஓட்டுனர் தனது செல் போனில் டிஜிட்டலில் இருந்த பெர்மிட் ஆவணத்தை காண்பித்து, இந்தியில் பேசியபோது, தங்களை தவறாக பேசுவதாக நினைத்த போலீஸ், ஓட்டுனரை இறக்கி ஒரிஜினல் ஆவணத்தை கேட்டு சத்தம் போட்டதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் இருந்து இறங்கிய சுற்றுலா பயணிகள் சிலர், எங்க பார்த்தாலும் பணம் கேட்டால் எப்படி ? என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை கலைந்து போக செய்ய இரு போலீசாரும் கையில் பைப்புகளை எடுத்து அடித்து விரட்டி உள்ளனர்

போலீசார் சாதாரண உடையில் இருந்ததால் தங்களை தாக்குவது போலீஸ் என தெரியாமல் எதிர்தாக்குதலில் ஈடுபட்டதாக கூரப்படுகின்றது

பேருந்து ஓட்டுனர் கையில் கடப்பாறையுடன் போலீசாரை நோக்கி பாய்ந்துள்ளார். அவரை சுற்றுலா பயணிகள் தடுத்துள்ளனர்

கையில் கடப்பாறை எடுத்ததால், ஆத்திரம் அடைந்த போலீசார், இந்தியில் பேசி வாக்குவாதம் செய்த சிலரை சட்டையை பிடித்து இழுத்து வந்து சரமாரியாக அடித்து உட்கார வைத்தனர்

அவரை மற்ற சுற்றுலா பயணிகள் மீட்டுச்சென்றனர்

அக்கம்பக்கத்தினர் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கையில் கம்பெடுத்தனர், பெண் சுற்றுலா பயணிகளை தாக்கி பேருந்துக்குள் ஏறும்படி மிரட்டியதாக கூறப்படுகின்றது

இதில் காயம் அடைந்த சுற்றுலாபயணிகளும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளை சரமாரியாக தாக்கிய இரு காவலர்களும் தாங்கள் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

சம்பவம் குறித்து விவரித்த ஓமலூர் டி.எஸ்.பி ஆரோக்யராஜ், மொழி தெரியாததால் உண்டான குழப்பத்தால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாகவும், வெளி மாநில சுற்றுலாபயணிகளை தாக்கிய மதுவிலக்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

போலீசுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கி பூட்டிக் கொண்ட விசிக Ex மாவட்ட செயலாளர்..! மனைவியின் கோஷம் தான் ஹைலைட்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News