பைக் 'ஹாரன்' அடித்தும் வழிவிடாததால் ஆத்திரம்.. குடிபோதையில் பள்ளி மாணவர்களை தாக்கிய 2 பேர்..

0 5216

புதுச்சேரி திருக்கனூரில், சாலையில் வழிவிடாமல் சென்றதாக கூறி பள்ளி மாணவர்களை தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாரதி பள்ளி மாணவர்கள் 5 பேர், பள்ளி முடிந்ததும் கை கோர்த்தபடி வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அவ்வழியாக இருசக்கரத்தில் சென்ற 2 இளைஞர்கள், பல முறை ஹாரன் அடித்தும் மாணவர்கள் வழிவிடாமல் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்களை கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மது போதையில் இருந்ததாகவும், அவர்களும் அதே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments