ஏழைகளின் தேவையை வீடு தேடி வந்து நிறைவேற்றிய பிரதமர் மோடி - அண்ணாமலை

0 2352

ஏழை மக்களுக்கு எது இல்லை என்றாலும், அதை வீடு தேடி வந்து தந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் என் மண், என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அண்ணாமலை, வீடு, கழிவறை, வங்கிக் கணக்கு என ஏழை மக்களுக்குத் தேவையானவற்றை பிரதமர் நிறைவேற்றித் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2014-ஆம் ஆண்டுக்கு முன் பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே வங்கிக் கடன் கொடுத்த வந்த நிலை மாறி, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் சாமான்ய மக்களுக்கும் முத்ரா திட்டம் மூலம் கடன்கள் வழங்கப்படுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக, திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். கட்சிக் கொடிகளை ஏந்தியும் மேளதாளம் முழங்கவும் அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments