நீண்ட காலமாக ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!

நீண்ட காலமாக ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது இம்ரான் கான் எனும் ஹாஜா நஜர்பெதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த தேசியப் புலனாய்வு அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் ரகசிய இடத்தில் இருந்த அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 2021 ஜூலை மாதம் முதல் அவர் தலைமறைவாகி விட்டார். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் இதர வெளிநாடுகளுக்கும் ஆள் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்த ஹாஜா, ராமநாதபுரத்தில் பல்வேறு குற்றங்களிலும் தொடர்புடையவராக தேடப்பட்டு வந்தார்.
மங்களூரில் சில இலங்கை பிரஜைகளை தமிழ்நாடு வழியாக அவர் கடத்தி வந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் ஹாஜாவை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
Comments