ஹரியானா மாநிலத்தில் காரில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே சென்ற 3 பேர் கைது

0 1339

ஹரியானா மாநிலத்தில் காரில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த மாநிலத்தின் குருகிராம் நகரத்தில் ஃபோர்டு என்டோவர் காரின் மேற்கூரையில் பட்டாசுகளை வைத்து வெடித்துக் கொண்டே சிலர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வாகனத்தை ஓட்டிச் சென்றவர் அவருடைய உயிருக்கு மட்டுமின்றி சாலையில் சென்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்ததாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து காரைப் பறிமுதல் செய்த போலீசார், பட்டாசுகளை வெடித்துக் கொண்டே சென்ற 3 பேரைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments