சென்னை அருகே திருநங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலம் 2 பேர் கைது.

0 2267

தாம்பரம் அருகே திருநங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலம்  2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை திருநங்கை தயாளம்மா கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது.

அதன் ஐ எம் இ ஐ நம்பரை வைத்து ஆய்வு செய்ததில் பர்மா பஜார் பகுதியில் உள்ள செல்போன் கடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இரண்டு நபர்கள் வந்து செல்போனை  பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு சென்றதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜாஜி என்கின்ற ராஜா மற்றும் சந்திரன்  ஆகியோர் என்பது தெரியவந்ததை அடுத்து திருவள்ளூரில் இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த இவர்கள் இருவரும் பைக்கில் சென்ற போது, தயாளம்மாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகவும், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து தயாளம்மாளை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments