மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகளில் தீ விபத்து.....

0 1535

மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகள் எரிந்து தீக்கிரையாகின.

அம்மாநிலத்தின் நியூ அஷ்தியில் இருந்து அகமது நகருக்கு அந்த ரயில் சென்றுக் கொண்டிருந்தது. நாராயண்பூர் என்ற இடத்துக்கு அருகே ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த 4 பெட்டிகளிலும் தீ மளமளவென பரவியது.

ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments