காசாவில் முழுவீச்சிலான தரைத்தாக்குதலுக்கு தயாராக நிற்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படை

0 2416

காசாவில் முழுவீச்சிலான தரைவழித் தாக்குதலைத் தொடுக்க இஸ்ரேல் படைகள் எல்லையில் காத்திருக்கின்றன. அரசியல் தலைமையின் முடிவுக்காக காத்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

காசாவில் இருந்து மக்கள் தெற்குப்பகுதி நோக்கி இடம்பெயர இஸ்ரேல்3 மணி நேரம் கெடுவிதித்தது. இதையடுத்து ஏராளமானோர் குடும்பத்துடன் ஊர்களை காலி செய்தனர். காசாவில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் படையினர் தடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது.

காசாவில் வான், கடல், தரைவழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேலின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.இதனிடையே காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்தினால் ஈரான் தலையிடும் என்று அந்நாட்டு அரசு இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments