கடலூரில் வீடுகட்ட போலி அனுமதி வழங்கி மோசடி செய்த நபர் கைது

0 924

கடலூர் மாநகராட்சி பகுதிகளில் வீடுகட்ட அரசாங்க முத்திரையுடன் திட்ட மற்றும் கட்டடம் கட்ட போலி அனுமதி வழங்கி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆணைக்குப்பத்தை சேர்ந்த சேதுபாரதி என்பவர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநரின் கையொப்பத்தை போட்டு மனை பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது தெரியவந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

மாநகராட்சி ஊழியர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து சேதுபாரதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments