தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புவதாக பிரதமர் மோடி கருத்து..!

தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மஹ்பூப்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானாவுக்கு சுத்தமான, ஊழல் இல்லாத, வெளிப்படையான ஆட்சி தேவை என்று குறிப்பிட்ட அவர், அதற்கு பாஜகவே தகுதியானதாக இருக்கும் என்று பேசினார்.
மேலும், விவசாயிகளுக்கான திட்டங்களின் மூலம் மாநில அரசு பணம் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டிய மோடி, நீர்ப்பாசனத் திட்டம் என்ற சாக்கில், தெலுங்கானாவில் ஊழல் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆளும் BRS கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் பிரச்னைகளில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments