கூட்டணி குறித்த கே.பி.முனுசாமியின் பேட்டியை நான் பார்க்கவில்லை... தற்போதைக்கு யாத்திரையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம் - அண்ணாமலை

0 1525

பாஜக - அதிமுக கூட்டணி குறித்த கேபி.முனுசாமியின் பேட்டியைத் தான் பார்க்கவில்லை என்றும் தற்போதைக்கு என் மண் என் மக்கள் யாத்திரையில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கூடலூரில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். 

செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக ரயில்வே துறையில் தற்காலிகமாகப் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தங்களது கோரிக்கையை அண்ணாமலையிடம் அழுதுகொண்டே முன்வைத்தனர்.

அதற்கு 'மக்களுக்காக சேவை செய்யும் அரசு அதிகாரிகள் அழக்கூடாது' என்றும் உங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் பேசியிருப்பதாகவும் கூறினார். 

அண்ணாமலை அறிவுறுத்தியும் கேட்காமல் சிலர் பெண்களுடன் சென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ததால் டென்ஷனான அண்ணாமலை, தன்னிடம் எமோஷனல் டிராமா வேண்டாம் என்றும் யாத்திரையில் வந்து இப்படி செய்யலாமா என்றும் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments