சொந்த அக்கா மகனே ரூ.37 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் அம்பலம்... 3 பேர் கைது, 5பேருக்கு வலைவீச்சு

0 1383

சென்னை வில்லிவாக்கம் அருகே தம்பதியினரை கட்டிப் போட்டு 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய 5பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 22ந்தேதி அன்று சிட்கோ நகரைச் சேர்ந்த சோழன்-வனஜா தம்பதியினர் வீட்டில் இருந்த போது அதிகாலை 3 மணி அளவில் மூகமூடி அணிந்த 5பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்தது.

பின்னர் கத்தியால் மிரட்டிய அந்த கும்பல் அவர்களை கட்டிப் போட்டு பீரோவில் இருந்த 70 சவரன் நகை, மூன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டது.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சோழனின் அக்கா மகன் ராமர் தனது நண்பர்களுடன் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

அதனை அடுத்து ராமர் உள்பட 3பேரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments