சேலம்த்தில் காதல் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் போலீசில் சரண்

0 2128

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வனப்பகுதியில் காதல் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

காடையாம்பட்டி தாலுக்கா ஜோடுகுளி வனப்பகுதியில் புளிசாத்து முனியப்பன் கோவில் அருகே இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் கணவர் முரளிகிருஷ்ணன் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

விசாரணையில்  இருவரும் காதலித்து அலைபாயுதே பட பாணியில் வீட்டிற்கு தெரியாமல் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் தன் காதல் மனைவி கோகிலவாணி பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை கைவிடும்படி சொன்னதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கோகிலவாணியை கொலை செய்ததாகவும், அடையாளத்தை மறைப்பதற்காக முகத்தை சிதைத்து பெட்ரோலை ஊற்றி எரித்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர்  போலீசார் விசாரிப்பதை அறிந்து நேரடியாக காவல் நிலையம் வந்து சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments