சென்னை வில்லிவாக்கத்தில் வயதான தம்பதியைத் தாக்கி பணம், நகை கொள்ளை.. கூலிப்படையை ஏவி கொள்ளையில் ஈடுபட்ட உறவினர் இருவர் கைது.. !!

0 1084

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியைத் தாக்கி, கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவர்களது உறவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை சோழன் - வனஜா என்ற அந்த தம்பதியைத் தாக்கி 75 சவரன் நகைகள், மூன்றரை லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டன.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரித்ததில், தம்பதி தனியாக இருப்பதைப் பயன்படுத்தி, அவர்களது உறவினர்களான ராமு, ராதா ஆகியோர் கூலிப்படைகளை ஏவி கொள்ளையில் ஈடுபட்டத் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments