வசதியான பெண்களுக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு பாவப்பட்டவர்களை விட்டு விட்டார்கள்.. மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஆட்சியரகத்தில் குவிந்த பெண்கள்

0 1856

ஆயிரம் ரூபாய்க்காக ஒருவாரமாக தூங்காமல் இருந்ததாகவும், வசதியான பெண்களுக்கெல்லாம்  பணம் கொடுத்து விட்டு பாவப்பட்டவர்களை விட்டு விட்டார்கள் என கன்னியாகுமரியில் பெண்கள் தெரிவித்தனர்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிகளவில் வந்ததைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அலுவலக வாசலிலேயே கணினி அமைக்கப்பட்டு பெறப்படும் விண்ணப்பங்களை ஊழியர்கள் பதிவேற்றம் செய்து வந்தனர்.

பணம் பெற்றுக் கொண்டீர்கள் என்று மெசேஜ் வந்துள்ளது ஆனால் பணம் கிடைக்கவில்லை என பெண் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments