காங்கிரஸ் ஆட்சி ஊழலில் தான் கவனம் செலுத்தியது : பிரதமர் மோடி

0 1320

காங்கிரஸ் ஆட்சியில் ஊழலில் தான் கவனம் செலுத்தப்பட்டதே தவிர ஊரக வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ஹரியானா மாநில பா.ஜ.க. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிதிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமர், வளர்ச்சித் திட்டங்களில் காங்கிரஸ் கவனம் செலுத்தாததால், நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பிறகும் 18 ஆயிரம் கிராமங்களில் மின் வசதி இல்லாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கை, கிராமப்புற பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் சாதகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு திட்டத்தையும் 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்குடன் அரசு இயங்கி வருவதாகவும், முழு உத்வேகத்துடன் வளர்ச்சிப் பாதையில் நாடு முன்னேறி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments