மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியில் ராட்சத கிரேன் சரிந்து விபத்து.. 17 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு .. !!
மகாராஷ்டிராவில் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தானே மாவட்டம் ஷாஹாபூரில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெடுஞ்சாலைகள், ரயில் பாலங்கள் மற்றும் பெரியக் கட்டடங்களுக்கான இரும்புத் தூண்களை நகர்த்த உதவும் ராட்சத கிரேனை இயக்கியபோது, கிரேன் சரிந்துள்ளது.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மராட்டிய மாநில அரசும் அறிவித்திருக்கிறது.
Comments