குழந்தை பெற்றுத் தர தகுதியில்லை என அடித்து துன்புறுத்திய கணவனின் கொடுமை தாங்காமல் மனைவி எடுத்த விபரீத முடிவு....!

0 2526

புதுச்சேரியில் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெண் ஒருவர், கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருக்கனூரைச் சேர்ந்த மோனிகா என்ற அந்த பெண், கடந்த 25ஆம் தேதி தனது தாயை போனில் அழைத்து, கணவர் அரவிந்த் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

மறுநாள் நேரில் வருவதாகக் கூறிய அவரது தாய், 26ஆம் தேதி காலை மோனிகாவை தொடர்புகொள்ள முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை.

அதே பகுதியில் வசிக்கும் மூத்த மகளிடம் கூறி பார்க்கச் சொன்னபோது திருமணத்துக்கு வழங்கிய கூரைப் புடவையைக் கொண்டு மோனிகா தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

தற்கொலைக்கு முன்னதாக மோனிகா பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களில், குழந்தை இல்லை என்பதற்காக கணவன் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதனிடையே பேத்தி இறந்த செய்தி கேட்டு, மோனிகாவின் பாட்டியும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். மோனிகா வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, கணவர் அரவிந்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments