தவறான தொடர்பை கண்டித்த கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்ற மனைவி உட்பட 3 பேர் கைது..!

0 27161

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே தனது தவறான உறவுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

மலையப்பம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் பெங்களூருவில் வேலை செய்து வந்தார். அவரது மனைவி நிவேதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி அல்சர் பிரச்சனையால் சுந்தர்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நிவேதா உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் அவர் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. நிவேதாவின் செல்போனை ஆய்வு செய்ததில் அவருடைய ஆண் நண்பர் தினேஷ் என்பவன் சிக்கினான். வேலைக்குச் சென்ற இடத்தில் தனது தோழி வித்யா மூலம் அறிமுகமான தினேஷுடன் நிவேதாவுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து சுந்தர்ராஜ் கண்டிக்கவே, தினேஷ் மற்றும் வித்யாவுடன் சேர்ந்து அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து தூங்கவைத்து, பின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுவிட்டு, சடலத்தை தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments