இமாச்சலப் பிரதேசத்தில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள்.. 29 நாடுகளைச் சேர்ந்த 687 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு..!

0 932

இமாச்சலப் பிரதேசத்தில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

ராணுவமும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இமாச்சலத்தின் காவல்துறை டிஜிபி சஞ்சய் இது வரை 70 ஆயிரம் பேரை குலுவில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.

29 நாடுகளைச் சேர்ந்த 687 சுற்றுலாப்பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் 22 பேரை காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments